;
Athirady Tamil News

வைபவத்தில் அமைச்சர் பந்துலவை முந்திய யானைகள்!

0

அமைச்சர் பந்துல குணவர்தன கலந்துகொள்ளவிருந்த வைபவம் ஒன்றில் அவருக்கு முன்பாக யானைக்கூட்டம் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அம்பன்பொலவிற்கும் கல்கமுவவிற்கும் இடைப்பட்ட பகுதியில்அதிகளவில் காட்டு யானைகள் வீதியை கடது செல்கின்றது வழமையாகும்.

இதனால் அந்தப் பகுதியில் யானைகள் வீதியை கடப்பதற்காக பாதையை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கான வைபவம் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று(01) நடைபெற்றது.

இந்நிலையில் வைபவம் ஆரம்பமாக சிறிது நேரத்திற்கு முன்பு அங்கு கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியவாறு காட்டு யானைக் கூட்டம் அவ்விடத்தை கடந்து சென்றுள்ள நிலையில் குறித்த புகைப்பட சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.