;
Athirady Tamil News

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..மேற்கூரை இடிந்து 3 பேர் பலி

0

சென்னையில் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் தனியார் கேளிக்கை விடுதி அமைந்துள்ளது.

இதன் அருகே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேளிக்கை விடுதியின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது.

முதல் தளத்தின் மேற்கூரை விழுந்ததில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மீட்புக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது விடுதியில் பணியாற்றி வந்த மூன்று பேர் உயிரிழந்ததும், அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் மற்றும் 2 பேர் மணிப்பூர் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

தீயணைப்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.