;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இரத்ததான நிகழ்வு

0

யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் “உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்” எனும் தொனிப் பொருளிலான இரத்ததான நிகழ்வானது நலன்புரிச் சங்க தலைவரும் உதவி மாவட்டச் செயலாளருமான உ.தா்சினி தலைமையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் பங்குபற்றுதலுடனும் இன்றைய தினம் (29.04.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் இரத்ததான ஆரம்ப நிகழ்வில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) க.ஸ்ரீமோகனன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் வைத்திய கலாநிதி P. கண்ணன், பொதுச் சுகாதார பரிசோதகர் த.ரவீனதாஸ், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.

மேலும், இரத்ததான நிகழ்வில் 25 மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் குருதிக் கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.