;
Athirady Tamil News

குங்குமம் வைக்கும்போது நடுங்கிய மணமகனின் கை – திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

0

குங்குமம் வைக்கும்போது மணமகனுக்கு ஏற்பட்ட கை நடுக்கத்தால் திருமணம் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுங்கிய கை
பீகார், கைமூர் மாவட்டத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இதில், மணமகளுக்கு நெற்றியில் குங்குமம் வைக்கும் சிந்தூர் தானம் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக அங்கு உறவினர்கள் கூடியிருந்தனர்.

அப்போது மணமகன், மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கும் நேரத்தில் திடீரென அவரது கை விரல்களில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த மணமகள் திடீரென திருமணத்தை நிறுத்துமாறு கோரியுள்ளார்.

நின்ற திருமணம்
தொடர்ந்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மணப்பெண்ணை சமாதானப்படுத்த முயன்றும் அவர் மறுத்துவிட்டார். உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார், இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தி, திருமணத்தை நடத்த முயற்சித்துள்ளனர்.

இருப்பினும் மணமளின் பிடிவாதத்தால் அதுவும் தோல்வியடைந்தது. மேலும், மணமகன் உடல்நிலை சரியில்லை என்று மணப்பெண் குற்றம் சாட்டி, அவரை பைத்தியம் என அழைத்துள்ளார்.

இதனையடுத்து திருமணம் நின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.