;
Athirady Tamil News

நீரில் மூழ்கிய சுவிஸ் யுவதியை காப்பாற்றிய பொலிஸார்

0

பொத்துவில் கடற்பகுதியில் நீரில் மூழ்கிய சுவிஸ் நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவர் , உயிர்காக்கும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார். பொத்துவில் எலிஃபண்ட் ராக் கடற்கரையில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் நீராடச் சென்றுள்ளார்.

இதன்போதே 17 வயதான சுவிஸ் நாட்டைச் சேர்ந்த யுவதி நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது பலத்த நீரோட்டத்தில் சிக்கி மூழ்கியுள்ளார்.

பெண் நீரில் மூழ்குவதை பொத்துவில் பொலிஸ்பிரிவின் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் அவதானித்தனர்.

உடனடியாக செயல்பட்ட உயிர்காக்கும் அதிகாரிகள், சுவிஸ் யுவதியை மீட்டு கரைசேர்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.