;
Athirady Tamil News

பணயக் கைதிகளின் பெயர்ப் பட்டியலை பரிமாறிக்கொண்ட இஸ்ரேல் – ஹமாஸ்

0

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவாரத்தைக்ள நடந்து வரும் நிலையில், விடுவிக்கப்பட வேண்டிய பணயக் கைதிகளின் பெயர் பட்டியலை இரு தரப்பினரும் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிலையில் தற்போது 48 இஸ்ரேலியர்கள் ஹமாஸின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி முதல் எகிப்தின் ஷர்ம் எல் ஷெயிக் நகரத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் மூலோபாய விவகாரங்கள் அமைச்சர் ரோன் டெர்மர் இன்று கலந்துகொள்ள இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.