கிளிநொச்சி வீடு ஒன்றில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்னாங்கண்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 131 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைசெய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து வீட்டினை சோதனைக்கு உட்படுத்திய போது கஞ்சா மீட்கப்பட்டிருந்தது. மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றார்.
அதேவேளை நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனையையும் , விற்பனையையும் தடுக்க அனுர அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.