;
Athirady Tamil News

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்ட இணையக்கோபுரம் !!

0

காலிமுகத்திடல் – ‘கோட்டா கோ கம’ என்ற கோசத்துடன், தொடச்சியாக போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், இப்பகுதியில் இணைய வலையமைப்பு வசதி மிகவும் மந்தகரமான முறையில் காணப்பட்டுவந்தது.

இந்த நிலையில், அதனை நிவர்த்திசெய்யும் விதமாக போராட்டக்காரர்களால் புதிதாக இணையக்கோபுரம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் இணைய வலையமைப்பு வசதிகளை செயலிழக்கச் செய்யும் வகையிலான கருவியொன்று ஜனாதிபதி செயலக முன்றலில் பொருத்தப்பட்டிருக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டது.

இதையடுத்து, போராட்டம் நடைபெறும் இடத்தில் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் வலையமைப்பு வசதியை வழங்கக்கூடிய வகையில் இந்த இணையக்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.