பிரேரணைக்கு சுயேட்சை எம்.பிக்கள் ஆதரவு !!

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயேச்சைக் குழு எம்.பிக்கள் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, இன்று (07) அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரசாங்கத்தின் 10 அங்கம் வகிக்கும் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சைக் குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.