;
Athirady Tamil News
Yearly Archives

2023

ஜன.1-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்!

விண்வெளி ஆய்வுக்கான செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் திங்கள்கிழமை (ஜன.1) விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுன்ட் டவுன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தபால் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் தபால் கட்டணத்தை திருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல மூலப்பொருட்களின் விலையேற்றமே இவ்விலை திருத்தத்தின் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. தபால்…

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 1500 இற்கும் அதிகமானோர் கைது

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 1500 இற்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வழங்கியுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் விசேட போதைப்பொருள் நடவடிக்கையின் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.…

ஹயஸ் – முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து! 4 வயது சிறுவன் உயிரிழப்பு

ஹயஸ் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம் மீரிகமை பிரதேசத்தில் நேற்று (29.12.2023) இரவு 8.30 மணியளவில்…

பாடசாலைக் கல்வி முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் கல்விச் சீர்திருத்தங்களின் பிரகாரம் மாகாண சபைகளின் கீழ் இயங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக கல்விக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…

அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை : வெளியான அறிவிப்பு

ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் எரிபொருளுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதியமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார். இதனால், எரிபொருள் மீதான 7.5% துறைமுகம்…

விருந்து நிகழ்ச்சியில் திடீரென நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல்! 6 பேர் பலியான…

மெக்சிகோவில் அதிகாலை மர்ம கும்பல் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர். மர்ம நபர்கள் வடக்கு மெக்சிகோவில் உள்ள சிடெட் ஒபெகன் பகுதியில் அதிகாலை விருந்து நிகழ்ச்சி நடந்தது. அப்போது துப்பாக்கி ஏந்திய மூன்று மர்ம நபர்கள்…

அதிவேகத்தில் டீக்கடைக்குள் புகுந்த லொறி! 5 ஐயப்ப பக்தர்கள் பலி

தமிழக மாவட்டம் புதுக்கோட்டையில் டீக்கடைக்குள் லொறி புகுந்து விபத்தை ஏற்படுத்தியதில் 5 பேர் பலியாகினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லொறி ஒன்று வந்துகொண்டிருந்தது. அரியலூரில் இருந்து வந்த அந்த…

ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : புத்தாண்டில் கிடைக்கவுள்ள கொடுப்பனவுகள்

கடந்த பரீட்சை மதிப்பீடுகளின் அடிப்படையில், ஆசிரியர்களுக்கான அனைத்து கொடுப்பனவுகளும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார். சாதாரண தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான…

வடக்கில் இடியுடன் கூடிய கனமழை! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று (30) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என…

விக்னேஸ்வரனை போல மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் அல்ல நாம் – சாணக்கியன்…

விக்னேஸ்வரனை போல மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் அல்ல நாம் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்சியாக மக்களுக்காக ஒரே பாதையில் பயணிப்போம் என தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று(29)…

வெள்ளத்தில் மூழ்கிய செல்ல கதிர்காமம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள்…

பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படவுள்ள பாரிய அபராதம்

நாட்டில் தொடருந்தில் பயணிக்கும் பயணிகளில் 25 சதவீதமானோர் பயணச் சீட்டு இன்றி சட்டவிரோதமாக பயணிப்பதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் பொது முகாமையாளர் எச்.எம்.பண்டார இதனைக்…

போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

இஸ்ரேலிய தாக்குதல்களிலிருந்து தப்பித்து காசாவின் தெற்கு பகுதி சென்ற கர்ப்பிணிப் பெண்ணொருவர் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 28 வயதான இஸ்மான் அல்-மஸ்ரே என்ற பெண்ணே இவ்வாறு 4 குழந்தைகளை…

மீண்டும் தலைதூக்கும் தட்டம்மை நோய் : சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட்ட தட்டம்மை மீண்டும் தலைதூக்கியுள்ளதாகவும்,சில மாதங்களில் 700 நோயாளிகள் பதிவாகியிருந்த நிலையில், நாட்டில் தொற்றுநோய் நிலைமையை மீண்டும் உருவாக்கி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

வெளிநாடொன்றில் சிக்கித்தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள்

ஜோர்தானின் சஹாப் பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றுக்கு தொழில் நிமித்தம் சென்ற 350 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இவர்களை இலங்கைக்கு அழைத்துவர தேவையான தலையீடுகளை இலங்கை வெளிநாட்டு…

மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிப்பு

நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களின் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.…

ஈழத்து குயில் கில்மிஷாவுக்கு அடித்த பெரும் அதிர்ஷடம்! திரைப்படத்தில் வாய்ப்பு

தென்னிந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கலந்துகொண்ட ஈழத்து குயில் கில்மிஷா முதல் பரிசை வென்றார். இவ்வாறான நிலையில், தென்னிந்திய திரைப்படத்தில் பாடும்…

இலங்கையில் பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றிய மோசடியாளர்கள்

இலங்கையில் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் போல் நடித்து, மூன்று பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து தருவதாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரிய…

தலைவரின் கனவை அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றிபெறச் செய்வோம் – பிரேமலதா விஜயகாந்த்!

வெற்றிக்கனியை விஜயகாந்த் பாதத்தில் சமர்ப்பிக்கும் நாள்தான் தேமுதிகவுக்கு உண்மையான வெற்றி நாள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மறைவு தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன்…

பதில் காவல்துறை மா அதிபருக்கெதிராக பேராயர் மல்கம் ரஞ்சித் மனு தாக்கல்

தேஷ்பந்து தென்னகோன் பதில் காவல்துறை மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கவும் உத்தரவிடவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் 4 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேற்று(29) பிற்பகல் வேலையிலேயே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

யாழில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடத்தை ஓவியமாக வரைந்து அசத்திய இளம் பெண்!

யாழ். பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் ஆலய பகுதியில் அமைந்துள்ள அசரால் காலத்தில் உருவாக்கப்பட்ட கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் தான் இந்த மந்திரி மனை. குறித்த…

யாழில் பேஸ்புக் மூலம் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் இன்று நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் - நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது…

இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றில் வழக்கு பதிவு செய்த நாடு

இஸ்ரேல் மீது தென் ஆபிரிக்கா சர்வதேச நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், 20000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதன்…

உயிரிழந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற கொலையாளி: வெளியான அதிர்ச்சி தகவல்!

இரத்தினபுரி மாவட்டம் - கஹவத்தையில் 71 வயதான பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவரது மகளுக்கும் இந்தக் கொலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென தெரியவந்துள்ளது. கொலையுடன் தொடர்புடைய…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து (படங்கள்)

மாத்தறை நோக்கிச் செல்லும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகளும் பௌசர் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது, நேற்று(29) இடம்பெற்றுள்ளது. அத்துடன், விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக…

மாதம் 300 பூனைகள்., Cat Soupக்கு பெயர் பெற்ற உணவகம் மூடப்பட்ட காரணம் இதுதான்

மாதம் 300 பூனைகளை கொன்று வந்த புகழ்பெற்ற உணவகம் ஒன்று மூடப்பட்டது. வியட்நாமில் Cat Soupக்கு பெயர் போன உணவகத்தை மூட அதன் உரிமையாளர் திடீரென முடிவு செய்துள்ளார். பூனைகளை கொன்று அறுத்ததற்காக திடீரென ஏற்பட்ட குற்ற உணர்ச்சியே உணவக…

கத்தார் நாட்டில் எட்டு இந்தியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய…

கத்தார் நாட்டில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியிருந்த நிலையில், அந்த விடயத்தில் முக்கிய திருப்பம் ஒன்று நிகழ்ந்து, சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட…

வலியால் துடிக்கும் காசா மக்களுக்கு கனேடிய அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு

இஸ்ரேல் இராணுவத்தின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டும் அகதிகளாகவும் வாழ வழியின்றியும் நிர்க்கதியாகி உள்ள காசா மக்களின் வேதனையிலும் கனடா அரசாங்கம் மகிழ்ச்சியான அறிவிப்பை விடுத்துள்ளது. இதன்படி “கனடா நாட்டினரின் உறவினர்கள் காசா பகுதியில்…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை: நிதி நெருக்கடியா?

விசாகப்பட்டினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள அனகாபல்லி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. உயிரிழந்தவர்கள்…

தனது தாயார் திருமதி.பூமலர் லிங்கம் அவர்களின் எழுபதாவது பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட உணவு…

தனது தாயார் திருமதி.பூமலர் லிங்கம் அவர்களின் எழுபதாவது பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட உணவு வழங்கிய கலாநிதி சஞ்ஜி லிங்கம் குடும்பம்.. (படங்கள் வீடியோ) சமூக உதவி மற்றும் கல்விக்கு உதவுதலில் தன்னார்வம் கொண்ட புங்குடுதீவு இறுப்பிட்டியில்…

போருக்குத் தயாராகுங்கள்… ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ள வடகொரிய ஜனாதிபதி

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு ராணுவத்தினரையும், அணு ஆயுத படைகளையும் போருக்குத் தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் மோதல் போக்குக்கு பதிலடி வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு ராணுவத்தினரை போருக்குத்…

மங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கர்நாடக மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 'விமான நிலையத்திற்குள் இருக்கும் விமானம் ஒன்றில்…

அதிகரிக்கவுள்ள முச்சக்கரவண்டி கட்டணம் : புதிய அறிவிப்பால் பரபரப்பு

பெட்ரோல் விலை அதிகரித்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (29) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அகில இலங்கை…