;
Athirady Tamil News
Daily Archives

30 May 2026

வெளிநாடொன்றில் 2,000 இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு

துபாய் அல் மக்தூம் சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 2,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அல்மக்தூம் விமான நிலைய விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும் சீனாவின் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (CHEC) நிறுவனம் இது…

இஸ்ரேல் மீது இந்திய மக்களிடம் அதிக அன்பு உள்ளது; பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம்

ஜெருசலேம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று ஜோர்டான் பள்ளத்தாக்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். சர்வதேச நாடுகளுடனான ராஜாங்க ரீதியிலான உறவை இஸ்ரேல் வலுப்படுத்துவது குறித்து நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பெஞ்சமின்…

மகாவலி ஆற்றில் கோழிக்கழிவுகளை கொட்டியவர்கள் கைது

கோழிக்கழிவுகளை , மகாவலி ஆற்றில் கலக்கும் ஹட்டன் ஓயா ஆற்றில் கொட்டியதற்காக, ஹட்டன் பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகளால் (29) சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இரு சந்தேக நபர்களும் கோழிக்கழிவுகளை லொறியில் ஏற்றிக்கொண்டு…

பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி மாயம்

தங்காலை ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இவர்கள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மாணவர்களைக் கண்டறியும்…

தமிழர் பகுதியில் அதிர்ச்சி; கைபேசியை கொடுக்க மறுத்த 11 வயதுச் சகோதரி; கொலை செய்த 14 வயதுச்…

மட்டக்களப்பு ஏறாவூர் வீடு ஒன்றில், தனியாக இருந்த 11 வயதுச் சகோதரி வைத்திருந்த கைபேசியைத் தர மறுத்ததால், அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்து , குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்…

ஈரானின் கச்சா எண்ணையை வாங்கினால் பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் சட்ட்விரோத எண்ணை வர்த்தகத்திற்கு ஒத்துழைக்கும் அல்லது ஈரானின் எரிசக்தி தயாரிப்புகளை வர்த்தகம் செய்யும் எந்தவொரு நிறுவனம் மீதும் அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை…

வடலூர் அருகே முகம் சிதைந்த நிலையில் இளம்பெண் சடலமாகக் கண்டெடுப்பு

சென்னை, கடலூர் மாவட்டம், வடலூர் கண்ணுத்தோப்பு பாலத்தின் அருகில், விக்கிரவாண்டி - கும்பகோணம் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இந்தப் பகுதியில் 30 வயது இளம்பெண் ஒருவர் அரைகுறையாக புதைக்கப்பட்டிருப்பதைக் கண்ட…

மராட்டியத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழப்பு

மராட்டிய மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் புனே பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர்.பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள டபோடி மற்றும் புகேவாடி…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 18 அதிரடியாக கைது

சட்டவிரோதமான முறையில் 31,380,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாய் மற்றும் மலேசியாவின்…

தையிட்டி விகாரை பகுதியை புகைப்படம் எடுத்த வடமராட்சி இளைஞர்கள் கைது

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர்    வெசாக் தினத்தினை முன்னிட்டு , விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் 

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக தொடரும் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம்…

அமெரிக்கா-சீனா மோதினால்…லண்டன் நிறுவனம் பகீர் அறிக்கை

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே போர் மூண்டால், அது உலகையே அழிக்கும் அணுஆயுதப் போராக மாற வாய்ப்புள்ளதாக லண்டன் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.சிங்கப்பூரில் நேற்று நடைபெற உள்ள சர்வதேச பாதுகாப்பு மாநாட்டுக்கு…

ஐ.நா.வின் பாலியல் வன்முறை கறுப்புப் பட்டியலில் இஸ்ரேலும் ரஷ்யாவும்!

ஐ.நா.வின் பாலியல் வன்முறை கறுப்புப் பட்டியலில் இஸ்ரேலும் ரஷ்யாவும் சேர்க்கப்பட்டுள்ளன . நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ள வருடாந்திர அறிக்கை ஒன்றின்படி, மோதல் தொடர்பான பாலியல் வன்முறைக்காக இஸ்ரேலிய மற்றும் ரஷ்ய பாதுகாப்புப் படைகளை…

இலங்கையில் புத்தரின் பெயரால் தப்பிக்கொள்ளும் பிக்குகள்!

நாடளாவிய ரீதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள அனுராதபுரம் சிறுமி துஷ்பிரயோக சம்பவத்தில் , சிறுமியை சீரழித்த பிக்குவை காப்பாற்றுவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிக்குகள் செயல் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்…

கொழும்பில் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை

இன்றையதினம் கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைப்பைச் சமநிலைப்படுத்தும் நோக்கில் மின்விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர…

இந்திய மாம்பழங்களுக்குத் தடை விதித்த ஜப்பான்! ஏன்?

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது. இந்திய மாம்பழங்களில் பூச்சிகள் காரணமாக, 1986-ல் ஜப்பானில் இந்திய மாம்பழங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தடை…

நன்றி கூறினார் சிவாஜிலிங்கம்; எஞ்சிய நிதி மாவீரர் குடும்பங்களுக்கு….

கடந்த வாரம் ஊடகங்கள் வாயிலாகத் , தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசரச் சத்திரசிகிச்சைக்காக நிதி உதவி வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழ் மக்களிடம் அவசர கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து,…

வவுனியாவில் விபத்து; கணவர் பலி…மனைவி காயம்

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரபெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற வாகன விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி காயமடைந்துள்ளதாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில்…

பாலியல் வன்முறை; ஐ நா மீது இஸ்ரேல் பாய்ச்சல்!

மோதல் நிறைந்த பகுதிகளில் நிகழும் பாலியல் வன்முறைக்கான கறுப்புப் பட்டியலில் இஸ்ரேலிய அமைப்புகளை ஐ.நா சேர்த்திருப்பதை , இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் வெட்கக்கேடானது மற்றும் அபத்தமானது எனக் கூறி கடுமையாகச் சாடியுள்ளது. இன்றைய முடிவை அதன்…

சீனாவில் 5.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ; மக்கள் அதிர்ச்சி

சீனா நாட்டின் ஷின்ஜியாங் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள துர்பான் நகருக்கு அருகில் 5.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று  (29) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.55…

தேரருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சாவகச்சேரி நீதிமன்றில் சுமந்திரன் தாக்கல்…

பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது பாலியல்…

அவதூறு பரப்பியமை ; எம்பி அர்ச்சுனா தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு,பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மற்றொரு வைத்தியர் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை…

இந்தியா வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் டிஃபானி டிரம்ப் தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு சனிக்கிழமை (மே 30) வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இருந்து தில்லிக்கு விமானத்தில் வரும் அவா், அங்கிருந்து தனி விமானத்தில்…

நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்று காலை பக்திபூர்வமாக நடைபெற்றது!

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான தேவி மஹோற்சவ தேர்த்திருவிழா இன்று(30) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் தீவிரம் ; ஈரான் முன்மொழிவை நிராகரித்த டிரம்ப்

ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தன. இந்த மோதல் தீவிரமடைந்ததையடுத்து, உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ்…

நெல்லை கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் தாயார்

கவின் செல்வ கணேஷ் கொலை வழக்கில், முக்கிய குற்றச்சாட்டின் கீழ் சுர்ஜித்தின் தாயாரும் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரி இன்று (2026.05.29) சிபிசிஐடி பொலிஸாரால் சுமார் 10 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்

தமிழர் பகுதியொன்றில் விபத்தில் சிக்கிய கார் ; சிறுவன் உள்ளிட்ட நால்வர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பயணித்த கார்,…

வெசாக் தினத்தில் 61 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

புனித வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த ஜனாதிபதி…

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஜனாதிபதி வழங்கியஉறுதி

செலவை ஈடுசெய்யக்கூடிய வகையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளை நிர்ணயிக்கும் முறையை மீண்டும் நிலைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளார். இது குறித்த…

மட்டக்களப்பில் தீ விபத்தில் பலியான குழந்தைகள் ; தந்தைக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்

மட்டக்களப்பில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குழந்தைகளின் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று…

ஆப்கானிஸ்தான் பெண்களின் கல்விச் சுதந்திரம் தொடர்ந்தும் முடக்கத்தில்

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சி அமைந்த பின்னர், பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்விச் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. BBC வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆப்கானிஸ்தானில் சிறுமிகள்…

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பு?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அதற்கான இறுதி அனுமதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்க வேண்டியுள்ளது என…