;
Athirady Tamil News

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு கொள்ளையடிக்கிறது: சித்தராமையா குற்றச்சாட்டு..!!

0

சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நிதி ஒதுக்கீடு கர்நாடகத்தில் 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகள் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது பிரதமர் மோடி கர்நாடகம் வந்து மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை. சிறப்பு நிதி வழங்கவில்லை. மக்களுக்கு துரோகம் செய்தார். கொரோனா பரவியபோது ஆக்சிஜன் வழங்கவில்லை. சாம்ராஜ் நகரில் ஆக்சிஜன் கிடைக்காததால் 36 பேர் உயிரிழந்தனர். அதற்கு பிரதமர் மோடியே காரணம். மோடி பிரதமரான பிறகு கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய வரி பங்கு குறைக்கப்பட்டுவிட்டது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் கர்நாடகத்திற்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டார். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு கொள்ளையடிக்கிறது. இதற்கு அனுமதி வழங்கியது போல் பிரதமர் மோடி மவுனமாக உள்ளார்.

இதற்கு அவர் பதிலளிக்க வேண்டும் அல்லவா?. நான் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இட ஒதுக்கீடு இதை கண்டித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலையின்மையை அதிகரிப்பது மத்திய அரசின் நோக்கமாக இருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது. இவ்வாறு சித்தராமையா கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.