;
Athirady Tamil News

சில பகுதிகளில் திடீர் மின் தடை

0

பியகம-பன்னிபிட்டிய பிரதான மின் இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று காலை திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு, களுத்துறை, மொரட்டுவை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் தடைப்பட்ட சில பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது வரை மின்சாரம் தடைப்பட்டுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகத்தை மீண்டும் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.