தீயில் எரிந்து கருகிய நான்கு முச்சக்கர வண்டிகள்
தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிவிட்டதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் முச்சக்கர வண்டிகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வேனும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெமட்டகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளரின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.