;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிளுடன் மோதிய வேன் ; பரிதாபமாக பலியான முதியவர்

0

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் உள்ள புத்தளம் வென்னப்புவை கொலிஞ்சடிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (06) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கட்டுனேரியா பகுதியைச் சேர்ந்த 76 வயதுடையவர் ஆவார்.

மேலதிக விசாரணை
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற முதியவர் பலத்த காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.