;
Athirady Tamil News

இஸ்ரேலுக்கான விமானங்களை ரத்து செய்தது பிரான்ஸ்!

0

ஈரான் உடன் போரில் ஈடுபட்டுள்ளதால் இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமானங்களை ஜூலை 14ஆம் தேதி வரை ரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய பிரெஞ்சு ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கு இயக்கப்படும் விமானங்கள் ஜூன் 25 வரை ரத்து செய்யப்படுகின்றன. இதேபோன்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்துக்கு இயக்கப்படும் விமானங்கள் ஜூலை 14ஆம் தேதி வரை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதோடுமட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபை, செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களையும் (இரு மார்க்கத்திலும்) ஜூன் 24 வரை நிறுத்திவைக்கப்படுகின்றன.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஃபின்லாந்தின் பின்னர் விமான நிறுவனமும் கத்தாருக்கு இயக்கும் விமானங்களை ரத்து செய்துள்ளது. துபைக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நேற்று முன்தினம் (ஜூன் 22) அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.