;
Athirady Tamil News

சிறுநீரில் கண்களை கழுவிய பிரபலம் – அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ காட்சிகள்

0

இன்ஸ்டா பிரபலம் ஒருவர் சிறுநீரைக் கொண்டு கண்கழுவிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுநீர் வீடியோ
புனேவைச் சேர்ந்தவர் நுபுர் பிட்டி. இந்த பெண்மணி தனது கண்களை சிறுநீரால் கழுவி அதனால் நன்மைகள் ஏற்படுவதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் சிறுநீர் இயற்கையின் சொந்த மருந்து.

கண்கள் வறட்சி, சிவத்தல், எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த முறை நல்லது என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. அவரின் இந்த செயலுக்கு மருத்துவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவர்கள் எச்சரிக்கை
கண்களை சிறுநீர் கொண்டு கழுவுவதால் நன்மை ஏற்படும் என்பதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. சமூக வலைதளங்களில் லைக்குகளை குவிக்க வேண்டும் என்பதற்காக சிலர் இதுபோன்ற தவறான மருத்துவ முறைகளை கூறி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இது போன்ற செயல்முறைகளை யாரும் வீட்டில் பரிசோதித்து பார்க்க கூடாது. உடல் நலனில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் சம்பந்தப்பட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து அதன் பின்னரே மருத்துவ முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

சுய மருத்துவம் மேற்கொள்ளுதல், இணையத்தில் கிடைக்கும் தகவல்களை வைத்து மருத்துவ மேற்கொள்ளுதல் ஆகியவற்றை அறவே கைவிடுதல் வேண்டுமென மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.