;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜீ தமிழ் சரிகமப பிரபலங்கள்!

0

தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல இசை நிகழ்ச்சியான ‘சரிகமப’ மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்களான புருசோத்தமன் மற்றும் அக்சயா ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளனர்.

யாழ். பலாலி விமான நிலையம் ஊடாக இன்று (02.06.2025) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து சிறப்பிப்பதற்கு இவர்கள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

ஜீ தமிழ் சரிகமப சீசன் 04 முடிவடைந்துள்ள நிலையில் தற்போது சீசன் 05 ஆரம்பமாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.