;
Athirady Tamil News

காஸா முனையில் இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் சடலங்கள்

0

ஹமாஸ் கைது செய்த இஸ்ரேலை சேர்ந்த 2 பிணைக் கைதிகளின் உடல்கள், காஸா முனையில் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து சுமார் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி காஸாவில் இஸ்ரேல் ராணுவம் 600 நாள்களுக்கும் மேல் கடுமையான தாக்குதல் நடத்திவருகிறது. இதில் இதுவரை 54,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா்; சுமார் 1,25,000 போ் காயமடைந்துள்ளனா்.

மேலும், ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 251 பேரை ஹமாஸ் படையினர் கடத்திச் சென்ற நிலையில், அவர்களை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கையாலும் இஸ்ரேல் தொடர்ந்து மீட்டு வருகிறது.

இந்த நிலையில், ஹமாஸ் படையினர் கடத்திச் சென்ற 2 பிணைக் கைதிகளின் உடல்களை காஸா முனையில் இஸ்ரேல் கண்டெடுத்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட 2 பிணைக் கைதிகளான காடி ஹகாய் (72), அவரது மனைவி ஜூடி வெயின்ஸ்டின் ஹகாய் (70) இருவரின் உடல்களையும் காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலிய பிணைக் கைதிகளை மீட்கும்வரையில், இஸ்ரேல் ராணுவம் ஓயாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹமாஸ் படையினரால், 251 பேர் பிணைக் கைதிகளாகக் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 56 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 20 பேர் உயிருடன் இருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.