;
Athirady Tamil News

தேனிலவுக்காக சென்ற புதுமணத்தம்பதி மாயம்: வெளியாகியுள்ள திடுக் தகவல்கள்

0

இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத்தம்பதி தேனிலவுக்குச் சென்ற நிலையில், மர்மமான முறையில் மாயமாகினர்.

புதுமணத்தம்பதி மாயம்
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார்கள்.

மே மாதம் 23ஆம் திகதி தம்பதியர் திடீரென மாயமானார்கள். பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, திங்கட்கிழமை ராஜாவின் உயிரற்ற உடல் Weisawdong நீர்வீழ்ச்சியின் அருகே அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில், ராஜாவின் மனைவியான சோனம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லாததால் தம்பதியரின் குடும்பம் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளது.

இதற்கிடையில், சோனம் விரதம் இருந்துவந்திருக்கிறார். தம்பதியர் காணாமல் போன அன்று சோனம் தன் மாமியாருக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அதில், தாங்கள் நீர்வீழ்ச்சி ஒன்றை நோக்கி ட்ரெக்கிங் செய்துகொண்டிருப்பதாகவும், ஆனாலும், தான் தனது விரதத்தை விடப்போவதில்லை என்றும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.

அந்த செய்தி இடையில் துண்டிக்கப்பட்டதாகவும், அதற்குப் பிறகு சோனமிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.