;
Athirady Tamil News

மீண்டும் மொட்டு அரசாங்கம்; தேர்தலுக்கு செல்வதே சிறந்தது !!

0

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டு மக்கள் சர்வக்கட்சி அரசாங்கத்தை எதிர்பார்த்தாலும் தற்போது மொட்டு அரசாங்கம் உருவாகி வருவதாக தெரிவித்தார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களைச் சுரண்டி ஆட்சியை நடத்துவதைத் தவிர தற்போதைய நிர்வாகத்துக்கு வேறு எந்த திட்டமும் இல்லை என குற்றம் சுமத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.