;
Athirady Tamil News

பொன்சேகாவை கோட்டா என்றழைத்த சபாநாயகர் !!

0

பாராளுமன்றத்தில் தற்போது சுமந்திரன் எம்.பியால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.

வாக்கெடுப்பின் நிறைவில், வாக்களிக்காதவர்கள் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ​கேட்டறிந்து அவர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்கினார்.

ஆளும், எதிர்த் தரப்பில் பலருக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சிலருடைய மேசையின் முன்பாக இருக்கும் இயந்திரம் செயற்படவில்லை. இதனால், அவர்களுக்கு வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.

வாக்களிக்க முடியாதவர்கள் எழுந்து நிற்க அவர்களின் பெயர்களை கூப்பிட்டு வாய்மூலமான வாக்களிப்பை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கேட்டறிந்துகொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் எழுந்துநின்றார்.

இதன்போது, கோட்டாபய… என சபாநாயகர் அழைத்தார். இதனால் சபையில் சிரிபொலி எழுந்தது. எனினும், “மன்னிக்கவும்” சிலவேளைகளில் தவறுகள் இடம்பெறுவது உண்டு என அறிவித்துவிட்டு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா என அழைத்தார்.

அந்தப் பிரேரணைக்கு சரத் பொன்சேகா ஆதரவாக வாக்களித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார். அதன் மீதே வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது

You might also like

Leave A Reply

Your email address will not be published.