நிதியமைச்சர் யார்? அதிரடி அறிவிப்பு வெளியானது !!

முன்னாள் நீதியமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தார்.
எனினும், அந்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால், அவரே நிதியமைச்சர் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர சபையில் தெரிவித்தார்.