;
Athirady Tamil News

ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது: பொலிஸ்!! (படங்கள்)

0

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார் அதன்பின்னர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மேலும் 2 பேர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக இன்று காலை முதல் ரம்புக்கனை பகுதியில் ரயில் கடவையை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் ஆர்ப்பாட்டம் மேலும் தீவிரமடைந்த நிலையில் பொலிஸார் கண்ணீர்ப்புகைப்பிரயோகத்தை இன்று மாலை மேற்கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பௌசருக்கு தீவைக்க நெருக்கிய வேளை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.