ஊரடங்கு அமுல் !!

ரம்புக்கனையில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர்களில் 8 பேர் பொலிஸார் என்றும் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இது நாளை (20) காலை வரையிலும் அமுலில் இருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.