;
Athirady Tamil News
Yearly Archives

2025

மன்னார் காற்றாலை மின் திட்டத்தின் தற்காலிகமாக இடைநிறுத்தம் ; ஜனாதிபதி தீர்மானம்

மன்னார் காற்றாலை மின் திட்டத்தின் செயற்பாடுகளை ஒரு மாதத்துக்குத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த…

யாழில் தீடிரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; கடும் சந்தேகத்தில்…

யாழில் பனையால் விழுந்ததாக கூறி குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பியோடி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் மருத்துவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். அழைத்து வந்தவர்கள்…

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவு!

நியூசிலாந்தின் லோயர் நார்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவானது.…

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி: பகிரங்கமாக அறிவித்த ஐரோப்பிய நாடொன்று

உக்ரைன் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பும் விளாடிமிர் புடினும் நேரிடையாக சந்திக்கவிருக்கும் நிலையில், உக்ரைன் போரில் ரஷ்யா வென்றுள்ளதாக ஹங்கேரியின் வலதுசாரி பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார். ரஷ்ய நெருக்கம் கடந்த 2010 முதல்…

ட்ரம்புடன் பேச்சுவார்த்தை… வடகொரியாவின் கிம்முடன் விவாதித்த விளாடிமிர் புடின்

உக்ரைன் போர் தொடர்பில் டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதை வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் உடன் தொலைபேசியில் புடின் பகிர்ந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கிம் ஜோங் உடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த வாரம்…

தனிமனித தீர்மானம் பல கோடி மக்களை பாதிக்குமா?

ச.சேகர் அமெரிக்க ஜனாதிபதியினால் தொடர்ந்து மாற்றப்படும் வரி விதிப்புகள் பற்றி தற்போது சில மாதங்களாகவே பேசப்படும் விடயமாக உள்ளது. ஆரம்பத்தில் இலங்கைக்கு 44 சதவீதம் என அறிவிக்கப்பட்ட வரி, படிப்படியாக குறைந்தது தற்போது 20 சதவீதமாகியுள்ளது.…

கோடிக்கணக்கில் போனஸ் ; இன்ப அதிர்ச்சி சாட்ஜிபிடி ஊழியர்கள்

உலகமெங்கும் தகவல் தொழில் நுட்பத்துறையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ பெரும் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி, எக்ஸ் நிறுவனத்தின் குரோக், கூகுளின் ஜெமினி ஏஐ உள்ளிட்டவை ஏஐ சந்தைகளில் முன்னணி வகிக்கின்றன.…

தங்கையையே பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கி கொலை செய்த அண்ணன்

இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் ரக்ஷா பந்தன் அன்று தனது கையில் ராக்கி கட்டிய தங்கை முறை உறவு கொண்ட 14 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞன் மாமாவின்…

ஹீலியம் ஆலையின் மீது ட்ரோன்கள் தாக்குதல் ; பெரும் சிக்கலில் ரஷ்யா

ரஷ்யாவின் ஒற்றை ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஒரென்பர்க் பகுதியிலுள்ள, அந்நாட்டின் ஒற்றை ஹீலியம் உற்பத்தி ஆலையின் மீது, உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன்கள் தாக்குதல்…

முல்லைத்தீவு பழைய நீராவியடிப் பிள்ளையார் தொடர்பில் நீதிமன்றம் தடையுத்தரவு

முல்லைத்தீவு பழைய நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் உட்பட தொல்லியல் பிரதேசமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் புதிய பெயர் பலகை எதனையும் நிறுவக் கூடாது என நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொக்கிளாய் பொலிஸாரால்…

கஞ்சாவுக்கு பச்சைக் கொடி காட்டும் ட்ரம்ப்!

கஞ்சாவைக் குறைந்த ஆபத்தான மருந்தாக மறுவகைப்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன்…

15 இலட்சம் ரூபா இலஞ்சம் ;சிறைச்சாலை சுகாதார சேவை பிரதி பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

இலஞ்சமாக பெற்ற சிறைச்சாலை சுகாதார சேவையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ரணசிங்க ஆராச்சிகே ஹேமந்த ரணசிங்கவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு…

உரிய ஆயத்தமின்றி வராதீகள்; அரச அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை

அரச அதிகாரிகள் தகவல்களை வழங்கும் போது பொறுப்புணர்வுடன் வழங்க வேண்டுமென தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய , அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்ட கூட்டங்களுக்கு வரும் அதிகாரிகள் தகவல்கள் சரியானவையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும்…

நம்பகத்தன்மையை இழக்கும் இஸ்ரேல்!

போா் விதிமுறைகளையும், சா்வதேச சட்டத்தையும் பின்பற்றும் ஜனநாயக நாடு என்று இஸ்ரேல் தம்மை கூறி வரும் நிலையில், காஸா போா் காரணமாக சா்வதேச அளவில் அந்நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. காஸாவை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேல் பிரதமா்…

2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை கையகப்படுத்த திட்டம்; ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

திருகோணமலை மாவட்ட கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை அரசாங்கம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை மக்கள் இன்று முற்றுகையிட்டிருந்தனர்.…

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் புதிய காவல்துறை மா அதிபராக, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்க புதிய காவல்துறை மா…

ஈரானிய மக்களை வீதிகளில் இறங்கி போராட அழைப்பு விடுத்த இஸ்ரேல்

ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கி தங்கள் அரசாங்கத்திடம் பொறுப்புக்கூறலைக் கோருமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்தார். உதவ காத்திருப்பதாக இஸ்ரேலுடனான 12 நாட்கள் கடும் மோதலுக்குப் பின்னர் ஈரான் மின்சாரம் மற்றும் தண்ணீர்…

ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் அரச பொறிமுறையை நிறுத்து – இலங்கை வங்கி ஊழியர்கள்…

யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை வலையமைப்புக்களை மூடி, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலகி இலங்கை வங்கி ஊழியர் சங்கம் இன்றைய தினம் புதன்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. அத்துடன் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்,…

ராஜஸ்தானில் கோர விபத்து: பிக்-அப் வாகனம் லாரியுடன் மோதியதில் 11 பேர் பலி

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் தௌசா-மனோஹர்பூர் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை பிக்-அப் வாகனம் கண்டெய்னர் லாரி மீது மோதியதில் குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள்…

யாழ்ப்பாணத்தில் ‘ஒற்றுமையின் நெடும்பயணம்’ செயற்திட்டம் தொடக்கம்: கிளீன்…

" இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்" எனும் கருப்பொருளிலான செயற்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவற்றுக்கான குழுவினர் புகையிரதம் மூலம் இன்றைய தினம்…

ட்ரம்பின் வரி விதிப்பால் இந்தியாவில் எத்தனை பேர் வேலை இழக்க நேரிடும்?

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பால் இந்தியாவில் பலரும் வேலை இழப்புகளை சந்திப்பார்கள். என்னென்ன துறைகள்? ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்கள் மீது முதலில் 25…

இலங்கையில் மனித உரிமை மீறல் ; சர்ச்சை கிளப்பிய அமெரிக்கா

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை கண்டறிந்து பொறுப்புக்கூற வைப்பதற்கு அரசாங்கம் மிகக் குறைந்த முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைக்கான மனித உரிமை…

இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு; புறப்பட்டது யாழ்தேவி ரயில்!

ஜனாதிபதி அனுரகுமாரவின் கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம் எனும் தொனிப்பொருளில் யாழ்தேவி ரயில் இன்று (13) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தினை…

செக் குடியரசு அதிபருடன் தொடா்பு துண்டிப்பு: சீனா

தலாய் லாமாவை சந்தித்துப் பேசியதற்காக செக் குடியரசு அதிபா் பீட்டா் பாவெலுடனான அனைத்து தொடா்புகளையும் துண்டிப்பதாக சீனா அறிவித்தது. திபெத்தில் பிரிவினையைத் தூண்டுவதாக சீனாவால் குற்றஞ்சாட்டப்படும் தலாய் லாமாவை பீட்டா் பாவெல் கடந்த மாதம்…

சீனா மீதான வரி விதிப்பு 90 நாள்களுக்கு ஒத்திவைப்பு டிரம்ப் அறிவிப்பு

சீனா மீது அறிவித்த 30 சதவீத வரியை மேலும் 90 நாள்களுக்கு (நவம்பா் 10 வரை) ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா். இந்தியா மீதான 25 சதவீத வரியை அமெரிக்கா ஏற்கெனவே அமல்படுத்திவிட்ட நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா…

தங்காலையில் துயரம்; கடல் அலையில் அள்ளுண்டு சென்ற சிறுமி

தங்காலையில் உள்ள மடிலா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுமி பலத்த அலைகளில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தங்காலையைச் சேர்ந்த குழந்தையின் குடும்பத்தினர் சுற்றுலா சென்று உள்ளூர் விருந்தினர் மாளிகையில்…

டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன. ரஷியாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப், முதலில் 25 சதவிகித வரியையும்,…

மூக்குத் துளை வழியாக மூளைக் கட்டி அகற்றம்! மாற்றி யோசித்த மருத்துவர்கள்

சண்டீகர்: உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த 2 வயது குழந்தையின் மூளையில் வளர்ந்திருந்த கட்டிய மூக்குத் துளை வழியாகவே அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மூளையில் வளர்ந்திருந்த 4.5 செ.மீ. அளவுள்ள கட்டியால், குழந்தையின்…

தொண்டைமானாறு கடலில் மீட்கப்பட்ட சடலம்; மேலதிக தகவல்

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு கடல் நீரேரியிலிருந்து பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. நேற்று மாலை (12) மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வந்த மீனவர்கள் கடலில் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல்…

வலி வடக்கில் தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் கோரிக்கை

வலி வடக்கில் இராணுவத்தினரால் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் காணி உரிமையாளர்கள்…

கிடா வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 15ஆம் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 15 ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் கிடா வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…

ரஷியாவின் ஒரே ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷியாவின் ஒற்றை ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் ஒரென்பர்க் பகுதியிலுள்ள, அந்நாட்டின் ஒற்றை ஹீலியம் உற்பத்தி ஆலையின் மீது, நேற்று முன்தினம் (ஆக.11) உக்ரைன்…

ரஷியாவின் மிக பயங்கர டெட் ஹேண்ட்! மெத்வதேவ் எச்சரித்த அணு ஆயுத அமைப்பு உண்மையா?

ரஷியாவுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பதிலடியாக, டெட் ஹேண்ட் எனப்படும் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதத் தாக்கும் அமைப்பு பற்றி முன்னாள் ரஷிய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் நினைவூட்டியிருந்தார்.…

24 மணிநேர அடையாள வேலைநிறுத்தை முன்னெடுத்துள்ள அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம்

குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தகுதியற்ற மருந்து கலவை நிபுணரை வைத்தியசாலைக்கு நியமித்ததற்கு எதிராக இந்த நடவடிக்கை…