;
Athirady Tamil News

அன்டனாவை அகற்ற தீர்மானம் !!

0

வலையமைப்பு நெரிசலுக்குத் தீர்வாக காலி முகத்திடலில் புதிதாக நிறுவப்பட்ட 20 அடி அன்டனா அமைப்பை அகற்ற இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நேற்றையதினம் அவ்வமைப்பு நிறுப்பட்டிருந்த நிலையிலேயே அதை அவ்விடத்திலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்டனா நிறுவியதன் ஒரே நோக்கம் காலி முகத்திடல் பகுதியில் நெரிசல் அளவைக் குறைப்பதே என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போதுள்ள உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி அப்பகுதியில் நெரிசல் அளவைக் குறைப்பதற்கான நிறுவனத்தின் சிறந்த முயற்சிகளை தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.