;
Athirady Tamil News

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் போராட்டம் !!

0

இலங்கையில், அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெறும் அமைதிப் போராட்டங்களைப்போன்று வெளிநாடுகளிலும் இலங்கையர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி அவுஸ்திரேலியாவிலும், பிரித்தானியாவிலும் இலங்கையர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அவுஸ்திரேலியாவின் பாராளுமன்றம் அருகே கூடிய இலங்கையர்கள், இலங்கையிலிருந்து மோசடி குற்றச்சாட்டுக்களுடன் கூடிய அரசியல்வாதிகள் அவுஸ்திரேலியாவுக்கு தப்பி வருவதை அனுமதிக்கக் கூடாது என தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன் ஒரு இலட்சம் கையெழுத்து செகரிப்பு வேட்டையையும் ஆரம்பித்தனர்.

இதேவேளை, பிரித்தானியாவின் லண்டணில் கூடிய இலங்கையர்கள், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.