;
Athirady Tamil News
Monthly Archives

January 2026

யாழில் பெண் ஒருவர் திடீர் மரணம்

யாழில் இதயம் செயலிழந்ததால் குடும்பப் பெண்ணொருவர் நேற்று (12) உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு நேற்றையதினம் நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள்…

பிரதேசசபை பெண் உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்

கம்பஹா, வெலிவேரிய, எம்பரலுவ பிரடீதசத்தில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கம்பஹா பிரதேச சபை உறுப்பினர் தனுஜா ஸ்ரீயந்தியின் வீட்டின் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம்…

இலங்கைக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்திய மத்தள விமான நிலையம்

மத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 39.3 பில்லியன் ரூபாய் நிகர இழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் மற்றும் அரச பங்களிப்புடன்…

வெனிசுவேலாவில் இருந்து வெளியேறுங்கள்; அமெரிக்க பிரஜைகளுக்கு உத்தரவு!

வெனிசுவேலாவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான சேவையை பயன்படுத்தி, அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா தனது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்புஇல் வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்க தூதரகம்…

பெண்கள் ஆபாசமாக சித்தரிப்பு: குரோக் ஏஐ-க்கு எதிராக பிரிட்டனில் விசாரணை

தொழிலதிபா் எலான் மஸ்குக்குச் சொந்தமான எக்ஸ்-ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலியான குரோக், பெண்களை ஆபாசமாக சித்திரிப்பதாகக் கூறப்படும் புகாா்கள் குறித்து பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான தகவல் அலுவலகம்…

கரூர் வழக்கில் CBI தலைமையகத்தில் விஜய் ; நடந்தது என்ன?

கரூர் மாவட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் நேரில் முன்னிலையானார். சுமார் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளுடன் அதிகாரிகள் அவரிடம் தீவிர…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்தும் , லொறியும் மோதி விபத்து; தப்பிய உயிர்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (13) காலை பேருந்தும் , லொறியும் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் லொறியொன்றும் பேருந்து ஒன்றும் மோதி…

மட்டக்களப்பில் வயோதிய தம்பதி தற்கொலை; 12 நாட்களில் 6 பேர் உயிர் மாய்ப்பு; அதிர்ச்சி தரும்…

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் முதியவர்களான கணவனும் மனைவியும் விஷம் உட்கொண்டு உயிரை மாயத்துக் கொண்ட சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தன்னாமுனை இராசையா லேனைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவரும், அவரது…

காதல்வயப்பட்ட 13 சிறுமி; முன்னாள் காதலன் கொலை மிரட்டல்

புத்தளம், சிலாபம், பங்கதெனிய பிரதேசத்தில் காதலை துண்டித்த கொலை மிரட்டல் விடுத்த காதலன் சிலாபம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பங்கதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய காதலனே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம்…

பொங்கலை முன்னிட்டு திருநெல்வேலியில் அமுலுக்கு வரும் போக்குவரத்து நடைமுறை

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்குடன் ஆடியபாதம் வீதியில் இராமசாமிப் பரியாரியார் சந்தியில் இருந்து திருநெல்வேலிச் சந்தி நோக்கி கனரக வாகனங்கள் மட்டும் உள்நுழைவதற்கு…

அமெரிக்காவுடன் போரிடவும் தயாா்: ஈரான்

அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்தவும் தயாா், தேவைப்பட்டால் போரிடவும் தயாா் என்று ஈரான் அதிபா் மசூத் பெஸெஷ்கியான் தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது உரையில் அவா் கூறியதாவது: அமெரிக்காவுடன் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தவும், உடன்பாடு…

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை அத்துமீறல் நுழைந்து…

யாழில் திருட்டு போன மோட்டார் சைக்கிள் ; CCTV காட்சிகள் அடிப்படையில் விசாரணை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த 11 ஆம் திகதி குறித்த குடும்பஸ்தர்…

பிஎஸ்எல்விசி62 ராக்கெட் தோல்வி: பசிப்பிக் கடலில் விழுந்த செயற்கைக்கோள்கள்

ஸ்ரீஹரிகோட்டா, இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி 62 இன்று விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே தனது பாதையில் இருந்து விலகிச் சென்றதால் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளை மட்டுமின்றி, நாட்டு…

மான் தாக்கி விவசாயி உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்

குருணால் ஹேரத்கம பகுதியில் காட்டு யானைகளிடமிருந்து விவசாய நிலத்தை பாதுகாக்கச் சென்று, வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், மான் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே சம்பவத்தில் மேலும் ஒருவர் படு காயமடைந்து வைத்தியசாலையில்…

நீதியின் மேடையில் நம்பிக்கை சிதைந்த தருணம் ; நீதிமன்ற பதிவாளருக்கு நேர்ந்த கதி

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர், எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த…

இலங்கை–அமெரிக்க உறவுகளில் திருப்பம்?கொழும்பில் இருந்து வெளியேறும் ஜூலி சங்

இலங்கையில் அண்மைக்காலமாக முக்கிய இராஜதந்திர நகர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து நாட்டை விட்டு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவல்களின்படி, ஜனவரி…

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

வங்கதேச சிறையில் இருந்துவந்த அந்நாட்டுப் பாடகர் புரோலாய் சாகி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) காலமானார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

‘வெனிசுவேலாவின் செயல் அதிபர் டொனால்ட் டிரம்ப்’ என்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக குற்றச்சாட்டை…

ஈரான்: 15 நாள் போராட்டத்தில் 420 பேர் பலி; அமைதிக்காக போப் வேண்டுதல்

தெஹ்ரான், ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு…

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: ஒருவர் பலி

கென்பரா, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. வெப்பம், அதிக காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் தீவிர…

குடும்பத்தையே சுட்டுக்கொன்ற இளைஞன் ; அமெரிக்காவில் பயங்கரம்

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் செடார்ப்ளப் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 7 வயது சிறுமி உள்பட 6 பேரை சுட்டுக் கொன்றுள்ளார். முதலில் தந்தை உள்பட 3 பேரை கொன்ற அவர் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் வேறு…

கட்டுநாயக்காவில் கொதிக்கும் வெப்பம் ; குளிரில் நடுங்கும் மலைநாடு ; ஒரே நாளில் இரண்டு…

இன்று (12) நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 31.5 பாகை செல்சியஸ் ஆக கட்டுநாயக்க வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, குறைந்தபட்ச வெப்பநிலை 15.9 பாகை செல்சியஸ் ஆக நுவரெலியா வானிலை…

சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்!

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. கடந்த மாதம் சிரியாவின் பால்மைரா நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க பாதுகாப்புப் படை வீரா்கள் எட்கா் பிரையன், வில்லியம்…

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து; அமைச்சர் பிமல் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த 6 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். அரசியலை இலாபம் ஈட்டும் தொழிலாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், பொதுச் சேவையில்…

ஜனாதிபதியை தமிழர்கள் நம்பியுள்ளனர் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்த வடக்கு…

கடந்த கால ஆட்சியாளர்களால் தமிழ் மக்கள் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றங்களைச் சந்தித்திருந்தனர். ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் நம்புகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய…

துயரமாக மாறிய திருமணக் கொண்டாட்டம் ; எரிவாயு வெடித்து மணமக்கள் உட்பட எட்டு பேர் பலி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த எரிவாயு கொள்கலன் வெடிப்புச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தலைநகரில் உள்ள ஒரு வீட்டில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி…

ஈரானில் கலவரத்தைத் தூண்ட அமெரிக்கா, இஸ்ரேல் சதி: அதிபா் பெசெஷ்கியான் குற்றச்சாட்டு

ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என்றும், இவ்விரு நாடுகளும் திட்டமிட்டு கலவரங்களைத் தூண்டி வருவதாகவும் ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியான் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மேலும், ‘மக்களின் நியாயமான…

யாழில் ஐஸ்சுடன் சிக்கிய இருவர்

யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போது இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். சம்பவத்தில் அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இருவரே நேற்று (11) கைது செய்யப்பட்டனர். சந்தேக…

கனடாவில் காய்ச்சல் தொற்று அதிகரிப்பு

கனடாவின் குறைந்தது இரண்டு மாகாணங்களில் விடுமுறை காலத்தில் காய்ச்சல் (இன்ஃப்ளூயன்சா) பரவல் உச்சத்தை எட்டியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. தேசிய தரவுகளின்படி, புதிய தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே உள்ளபோதிலும், புதிய ஆண்டின்…

கனடாவில் ஒரே நாளில் நடந்த இரு கொலைகள் ; ஒருவருக்கு ஆயுள் தண்டனை

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், கிரெஸ்டன் நகரைச் சேர்ந்த மிட்செல் மெக்இன்டையர் என்பவருக்கு, ஒரே நாளில் நடந்த இரண்டு கொலைகள் தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மரணங்களும் ஆரம்பத்தில் இயற்கை காரணங்களால் ஏற்பட்டவை எனத்…

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் பேருந்து காரும் மோதி கோர விபத்து; நால்வர் பலி

பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் முரசுமோட்டை பகுதியில் பேருந்தும் காரும் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி…

எழுவைதீவில் கடற்படையினரின் தேவைக்கு தனியார் காணி சுவீகரிப்பு ?

யாழ்ப்பாணம் எழுவை தீவில் தனியாருக்கு சொந்தமான காணிகளை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக அவற்றை அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எழுவை தீவில் ஜே / 39 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் ஒருவருக்கு சொந்தமான 2 பரப்பு…

கேரளம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்எல்ஏ கைது

பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கேரள மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக இரண்டு பாலியல் வழக்குகளை அம்மாநில…