பொறுமையாக இருக்குமாறு மஹிந்த வேண்டுகோள் !!

மக்கள் பொறுமையாக இருக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த நெருக்கடியை ஜனாதிபதியும் மற்றும் அரசாங்கமும் ஒவ்வொரு நொடியும் செயற்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை மையமாகக் கொண்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகின்றார். அந்த உரையின் ஊடாகவே மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரசாயன உரத்தை தடை செய்வதற்கான நேரம் இதுவல்ல, எனவே உர மானியத்தை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.