;
Athirady Tamil News

’ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்’ !!

0

நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கத்தயாராக இருக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆனால் நாங்கள் அமைச்சுப்பதவிகளை ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையில் அங்கம்வகிப்பதற்கு இணங்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்பார்ப்பாரேயானால், அவர் நாட்டுமக்களின் அடிப்படைக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதியை இணங்கச்செய்யவேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நாடு மிகுந்த நெருக்கடியான நிலையில் இருக்கின்றது. எனவே இந்த நிலை தீவிரமடையாமல் இருப்பதற்கு அவசியமான பங்களிப்பை வழங்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.