;
Athirady Tamil News

சிறைச்சாலையை தயார்ப்படுத்துங்கள் !!

0

இனி வருவது உங்களுக்கு கஷ்டமான காலம் என்பதனால் சிறைச்சாலைகளை விஸ்தீரப்படுத்தியும் துப்பாக்கி ரவைகள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை அதிகளவில் கொள்வனவு செய்தும் வைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொள்வதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

எத்தகைய ஒடுக்குமுறைகளின் ஊடாகவும் தமது போராட்டங்களை தடுக்க முடியாது என்றும், அவ்வாறு போராட்டங்களை தடுக்க முயன்றால் இன்னும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் இணையும் நிலைமையே ஏற்படும் எனவும் வசந்த முதலிகே குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன்போது கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதன்மூலம் ஜனாதிபதிஇ பிரதமர் ஆகியோரை பதவி விலகச் செய்ய முடியுமாக இருந்தது. ஆனால் இந்தப் போராட்டத்தினால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். தேர்தலில் தோல்வியடைந்து தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்த ஒருவரை ராஜபக்‌ஷக்களின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளது.

இவ்வாறாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற குழுக்களை ஈடுபடுத்தி ஒடுக்குமுறைகளை முன்னெடுத்துச் செல்கின்றார்.

போராட்டத்தில் பெரும் பங்களிப்பை வழங்கி தானிஸ் அலியை கைது செய்துள்ளனர். அவர் வெளிநாடு செல்வதற்காக விமானத்தில் ஏறிய பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார். சீஐடியினர் என்ற குழுவினர் போக்குவரத்து பொலிஸாரை கொண்டு கைது செய்துள்ளனர்.

இதனை கைது என்று கூற முடியாது இதனை கடத்தல் என்றே கூற வேண்டும். இங்கு பிரச்சினைகளுக்கு காரணமானவர்களும், மத்திய வங்கியை கொள்ளையிட்ட மற்றும் மக்கள் பணத்தை கொள்ளையிட்டவர்களும் வெளியில் இருக்கும் போது அதற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.

இவர்கள் மக்களின் ஆணையுடனேயே விளையாடுகின்றனர்.நாங்கள் வீதிக்கு இறங்குவோம். சில வாரங்களையே ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவோம். மக்களுக்காக நாங்கள் வருவோம். இதன்போது கைது செய்து தடுக்கலாம் என்று நினைக்க வேண்டுடாம். அப்படி இதனை நிறுத்தப்படாது. இவ்வாறு செய்தால் இன்னும் ஆயிரக்கணக்கில் போராட்டத்தில் இணையும் நிலைமையே ஏற்படும்.

ஆகவே சிறைச்சாலைகளை விஸ்தீரப்படுத்திக் கொள்ளுங்கள் துப்பாக்கி ரவைகள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை அதிகளவில் வாங்கிக்கொள்ளுங்கள் என்று ரணிலை கேட்கின்றோம். ஏனென்றால் இனி வருவது ரணிலுக்கு கஷ்டமான காலமே ஆகும். இதனால் அவரை கவனமாக இருக்குமாறு கேட்கின்றோம் என்றார்.

அவசரகால சட்டத்தால் சர்வதேச உதவிகளை இலக்கும் அபாயம் !!

தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம் !!

விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்!

நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!

’பட்டலந்த ரணில் நிரூபிக்க தவறிவிட்டார்’

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும்!!

பெத்தும் கேர்னர் கைது !!

இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன? (படங்கள்)

அவசர காலச்சட்டம் நிறைவேறியது !!

கொழும்பில் மற்றுமொரு போராட்டம்! புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!!

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே உள்ளனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!!

கோட்டாவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் !!

போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்! ஆனால் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டோம்: பிரதமர்!!

விசா காலம் நீடிப்பு! கோட்டாபயவின் அடுத்த திட்டம் அம்பலம்!!

இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)

கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)

விமானத்தில் வைத்து போராட்டக்காரர் கைது!! வீடியோ

காலி முகத்திடலில் பதற்றம் !!

கோட்டா விரைவில் திரும்புவார்: அரசாங்கம் !!

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – சஜித்!!!

சீனாவுக்கு செல்கிறார் ஜனாதிபதி ரணில் !!!

பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!

செப்டெம்பரில் இலங்கைக்கு புதியதொரு நெருக்கடி – பாக்கியசோதி!!

100 நாட்களுக்கு பின்.. மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்! இயல்புநிலை திரும்புமா? (படங்கள்)

இலங்கைக்கு நிதி கொடுக்காதீங்க.. ஜப்பானிடம் பற்ற வைத்த ரணில்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட சீக்ரெட்? (படங்கள்)

கோட்டாவுக்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.