;
Athirady Tamil News

இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)

0

இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி இன்னும் அவ்வாறே காணப்படுகின்ற போதிலும், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றது.

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னரான காலப் பகுதியில் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக சமையல் எரிவாயு வரிசைகள் பெருமளவு குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

சமையல் எரிவாயு விநியோகத்தை தற்போது வழமை போன்று விநியோகிக்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன், டீசல் மற்றும் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்கான வரிசைகள் அவ்வாறே காணப்படுகின்ற போதிலும், அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி, வாகன இலக்கத் தகடுகளின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருளை விநியோகிப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

எரிபொருள் பெற புதிய வசதி

எரிபொருள் விநியோகம், மூன்று கட்டங்களாக பிரித்து, வாகன இலக்கத் தகடுகளின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் விநியோகிக்கப்படுகின்றது.

அத்துடன், கியூ ஆர் இலத்திரனியல் நடைமுறையொன்றும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து, அதனூடாக கிடைக்கும் கியூ ஆர் இலக்கத்தை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காண்பித்து, அதனூடாக குறிப்பிட்டளவு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்நிய செலாவணி சர்ச்சை தொடர்ந்து காணப்படுகின்ற நிலையில், எதிர்வரும் 12 மாதங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.

நாளாந்த எரிபொருள் விநியோகத்தை உரிய வகையில் முன்னெடுக்க முடியாமை காரணமாகவே, கியூ ஆர் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து முச்சக்கரவண்டிகளும், தமது அதிகாரத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.

ஜுலை மாதம் 31ம் தேதிக்கு முன்னர், அனைத்து முச்சக்கரவண்டிகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.

தாம் பதிவு செய்யும் போலீஸ் நிலைய அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக மாத்திரம், முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருளை விநியோகிக்க எதிர்வரும் மாதம் முதலாம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும், மின்பிறப்பாக்கி உள்ளிட்ட எரிபொருள் ஊடாக பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு பிரதேச செயலகங்கள் பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு பதிவு செய்யப்படுவதன் ஊடாக, அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து இயந்திரங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறுகின்றார்.

பஸ் போக்குவரத்து நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்பி வருகின்ற நிலையில், பஸ்களில் தொடர்ந்தும் சனநெரிசல் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

அத்தியாவசிய பொருட்கள் வழமை போன்று கிடைத்தாலும், அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றன.

கடந்த காலப் பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பொருட்களில் விலைகள் அவ்வாறே பல மடங்காக அதிகரித்திருப்பதை காண முடிகின்றது.

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு, எரிபொருள் வாங்க வரும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை, முந்தைய வாரங்களுடன் ஒப்பிடும்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)

விமானத்தில் வைத்து போராட்டக்காரர் கைது!! வீடியோ

காலி முகத்திடலில் பதற்றம் !!

கோட்டா விரைவில் திரும்புவார்: அரசாங்கம் !!

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – சஜித்!!!

சீனாவுக்கு செல்கிறார் ஜனாதிபதி ரணில் !!!

பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!

செப்டெம்பரில் இலங்கைக்கு புதியதொரு நெருக்கடி – பாக்கியசோதி!!

100 நாட்களுக்கு பின்.. மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்! இயல்புநிலை திரும்புமா? (படங்கள்)

இலங்கைக்கு நிதி கொடுக்காதீங்க.. ஜப்பானிடம் பற்ற வைத்த ரணில்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட சீக்ரெட்? (படங்கள்)

கோட்டாவுக்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடு !!

அடேங்கப்பா.. இலங்கை அதிபர் மாளிகை போராட்டத்தில் 1000 பொருட்கள் திருட்டு.. என்னென்ன தெரியுமா? (படங்கள்)

உலக நாடுகளுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி!!

பொலிஸார் போராட்டத்திற்கு எந்த தடைகளையும் ஏற்படுத்தவில்லை – நிஹால்!!

ஐரோப்பிய ஒன்றியத்தின் காட்டமான செய்தி !!

சுமந்திரன் ஊடக சந்திப்பு!!

வறுமை.. அத்தியாவசிய பொருட்கள் இல்லை.. இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் தொழில்.. அதிர்ச்சி தகவல்!! (படங்கள்)

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தயார் – சஜித் அறிவிப்பு!!

போதைப் பொருளை பயன்படுத்தியிருந்த படையினரே போராட்டகாரர்களை தாக்கினர்-பாஹிங்கல ஆனந்த சாகர தேரர்!!

இலங்கை: போராட்டக்காரர்கள், செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்!!

அதிகாரத்தை ரணில் துஷ்பிரயோகம் செய்துள்ளார் !! (வீடியோ)

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து; ஐ.நாவிடம் மகஜர்!! (வீடியோ)

இலங்கை ராணுவத்தின் தாக்குதல்: பிபிசி செய்தியாளர் நேரில் கண்டது!! (வீடியோ)

“ராஜபக்ஸ நிழல் அரசாங்கம்” – சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள அறிவிப்பு!! (வீடியோ)

காலிமுகத்திடல் சம்பவம்:ஐக்கிய நாடுகள் சபை கவலை !! (வீடியோ)

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல்; அமைச்சரவை பதவிப்பிரமாணம் !! (வீடியோ)

24 மணி நேரத்திற்குள் சர்வாதிகாரியாக நிரூபித்த ரணில் – சம்பிக்க!! (வீடியோ)

உரிமைகள் மீறல்; மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் !! (வீடியோ)

கொடுங்கோல் ராஜபக்சேக்களாக உருமாறிய ரணில் விக்கிரமசிங்கே-கொழும்பு அடக்குமுறைக்கு உலக நாடுகள் கண்டனம் !! (படங்கள், வீடியோ)

பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம்! (வீடியோ)

இன்று கறுப்பு தினம்: சட்டத்தரணிகள் சங்கம் !! (வீடியோ)

இலங்கையின் புதிய பிரதமராகும் தினேஷ் குணவர்தன? யார் இவர்.. இக்கட்டான சூழலில் இருந்து நாட்டை மீட்பாரா!!

அதிவிசேட வர்த்தமானி வெளியானது!!! (வீடியோ)

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் : அமெரிக்க தூதுவர் கவலை!!

கோட்டா கோ கம இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்!! (படங்கள், வீடியோ)

இலங்கை ராணுவம் நள்ளிரவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: பிபிசி தமிழ் செய்தியாளரும் தாக்கப்பட்டார்!! (படங்கள், வீடியோ)

கொழும்பு அதிபர் செயலகத்தில் பாதுகாப்பு படைகள் அதிகரிப்பு. நள்ளிரவில் குவியும் போராட்டக்காரர்கள்!! (படங்கள்)

சீனாவின் கண்மூடித்தனமான கடன்பொறியே இலங்கையில் அழிவுக்கு காரணம் – அமெரிக்கா!!

நான் ராஜபக்சே சகோதரர்களின் கூட்டாளியா? யார் சொன்னது? பத்திரிகையாளர் கேள்விக்கு செம டென்ஷனான ரணில்!!

ரணில் விக்ரமசிங்க: இலங்கையில் பௌத்த முன்னுரிமையை தவிர்ப்பதற்காக ஜனாதிபதிக்கான கொடியை தடை செய்தாரா? (படங்கள்)

இலங்கையில் போராட்டம் போதும்… முடித்துக்கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ!!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க: “போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை” (படங்கள்)

ஜனாதிபதிப் பதவியேற்கும் நிகழ்வில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதா?

போராட்டக்காரர்களின் நாளைய திட்டம் !!

ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம்!!

ரணில் ஜனாதிபதியாக காரணமானவர்களை அம்பலப்படுத்தினர் விமல் !!

போராட்டக்காரர்கள் “கோ-ஹோம்-ரணில்” போராட்டத்தை, தடையின்றி நடத்த கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா பிரதேசம் ஒதுக்கி தரப்படும்!!

ஐ.நா படைகள் இலங்கைக்கு வரும்!!

‘பாராளுமன்றம் தீ வைக்கப்படும் என அச்சம்’ !!

சஜித் அணியில் ஒருவர் இராஜினாமா !!

இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு- கொழும்பில் ஓயாத போராட்டம்!!

இலங்கை நெருக்கடி: ரணிலை விழிபிதுங்க வைக்கும் 6 தலை வலிகள் தாக்குப்பிடிப்பாரா? (படங்கள்)

’ராஜபக்ஷக்களுக்கு நான் நண்பன் இல்லை’ !!

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம்!!

இலங்கை ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் தெரிவில், தமிழ் எம்.பிக்களின் பங்களிப்பு என்ன? (படங்கள்)

8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் இன்று பதவிப் பிரமாணம்!!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை!!

இலங்கையில் சரித்திரம் படைத்த தனி ஒரு எம்.பி. ரணில் விக்கிரமசிங்கே! பொருளாதார பேரழிவை சீரமைப்பாரா? (படங்கள்)

திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் !!

நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பாதுகாப்புப் படையினர் !!

எமது வேட்பாளர் தோல்வியடைந்துவிட்டார்- மஹிந்த!!

நான் புதிய ஜனாதிபதி என அறிவித்தமை எனக்கு மகிழ்ச்சி – ரணில் !!

இலங்கை ஜனாதிபதியை தெரிவு மறுத்தது இந்தியா!!

ரணிலின் வெற்றி எப்படி சாத்தியமானது? சுமந்திரன் கேள்வி !!

பண்டாரநாயக்கவின் சிலையை சுற்றியிருக்க தடை !!

ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தார் நாமல்!! (வீடியோ)

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: தனியொரு எம்.பி ஆக இருந்து 8வது ஜனாதிபதி ஆன இவர் யார்? (படங்கள், வீடியோ)

புதிய ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!! (வீடியோ)

ரணில் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்!! (வீடியோ)

ஜனாதிபதித் தேர்தல்: தற்போது கிடைத்த பெறுபேறு!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பினை மேற்கொண்டது.!! (வீடியோ, படங்கள்)

வாக்களித்தார் இரா.சம்பந்தன் ஐயா !! (வீடியோ)

வாக்களிப்பை புறக்கணித்தார் கஜேந்திரகுமார் !! (வீடியோ)

சேலைன் போத்தலுடன் வாக்களித்த எம்.பி !! (வீடியோ)

வாக்கெடுப்பு ஆரம்பம் !! (வீடியோ)

இலங்கையில் அதிபர் தேர்தல்..நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு – மும்முனை போட்டியில் வெல்வது யார்? (படங்கள்)

இலங்கை நெருக்கடி: “அன்று சாப்ட்வேர் எஞ்சினீயர், இன்று செருப்புகூட இல்லை” – ஒரு போராட்டக்காரரின் கதை!!

நன்றி தெரிவித்தார் டலஸ் அழகப்பெரும !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.