;
Athirady Tamil News

பாராளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது !!

0

இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்றத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற பிரதான நுழைவாயில் வரையிலான வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை தடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 14 பேர் உள்ளிட்டோருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாராளுமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.