;
Athirady Tamil News

இலங்கை நெருக்கடி: கோட்டாபய சிங்கப்பூருக்கு செல்வது ஏன்? அவரை பதவி விலக்கு செய்ய சபாநாயகரால் முடியுமா? (படங்கள்)

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை விட்டு மாலத்தீவுக்கு சென்ற நிலையில், இதுவரை அவர் தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பவில்லை. முன்னதாக, இந்த மாதம் 13ஆம் தேதி பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ஜூலை 9ம் தேதி தனக்கு அறிவித்திருந்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவுக்கு முன்பதாக ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் தனக்கு கிடைக்கும் என்றும் சபாநாயகர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஆனால், எதிர்பார்த்தபடி ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தான் இந்த சந்தர்ப்பத்தில் கடும் மன அழுத்தத்தில் உள்ளதாகவும், விரைவில் பதவி விலகல் கடிதத்தை கையளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்துள்ளதாக மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளுர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தற்போது பொறுப்பு ஜனாதிபதி ஆக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகல் கடிதத்தை அளிக்காத பட்சத்தில், அவர் பதவி விலகியதாகக் கருதி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சட்ட ஷரத்துக்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில், ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகியதாகக் கருதி, அவரை பதவி விலக்கு செய்ய அரசியலமைப்பில் இடமில்லை என்று அரசியலமைப்பு தொடர்பான வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி பதவியில் இருப்பவரை பதவி விலக்க வேண்டுமென்றால், அவருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்டு, அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கினரின் பெரும்பான்மை பலத்தைப் பெறுவது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கோட்டாபய பயன்படுத்திய அரசியலமைப்பு பிரிவு 37 (1)

இலங்கையிலிருந்து மாலத்தீவுக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் வெளிநாடு சென்றுள்ளதாக சபாநாயகரிடம் கூறியிருக்கிறார்.

இது குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஊடகங்களுக்கு பேசியபோது, ”அரசியலமைப்பு 37வது ஷரத்தின் முதலாவது பிரிவின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால், அந்த பதவியின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பொறுப்பு ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக என்னிடம் கூறினார்” என்று தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 37 (1) பிரிவு – ஜனாதிபதி, சுகவீனம் காரணமாக, இலங்கையில் இல்லாத நிலை அல்லது வேறெதேனும் காரணமாக தமது பதவிக்குரிய தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும் புரிவதற்கும் நிறைவேற்றுவதற்கும் இயலாதிருப்பதாகக் கருதுவாரெனில், அத்தகைய காலத்தின்போது ஜனாதிபதி பதவியில், அவருக்குரிய பதவிக்குரிய தத்துவங்களையும், கடமைகளையும் பணிகளையும் பிரயோகிப்பதற்கும் புரிவதற்கும் நிறைவேற்றுவதற்கும் பிரதமரை அவர் நியமிக்கலாம். அத்தகைய காலத்தின் போது பிரதமர் பதவியில் பதில் கடமை ஆற்றுவதற்கென ஏனைய அமைச்சர்களில் ஒருவரையும் நியமிக்கலாம்” என அரசியலமைப்பின் 37 (1) பிரிவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி ‘சுகவீனம்’ என்ற அடிப்படையிலேயே, நாட்டை விட்டு அவர் சென்றுள்ளதாக தற்போதைய சூழ்நிலையில் கருத முடிகின்றது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிங்ப்பூருக்கு ஏன் செல்கிறார்?

மாலத்தீவு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து சிங்கப்பூருக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக பிபிசி அறிந்துள்ளது. ஆனால், அவர் சிங்கப்பூரை தேர்வு செய்வதற்கான காரணம் என்ன?

கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி ஆக 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி பதவியேற்றார்.

அவர் பதவியேற்ற நாள் முதல், நாட்டை விட்டு தற்போது சென்றுள்ள காலப் பகுதி வரை அவர் சிகிக்கைகளுக்காக சிங்கப்பூர் சென்று வந்ததை அவதானிக்க முடிந்தது.

இந்த நிலையில், அரசியலமைப்பின் 37(1) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சை என்ற அடிப்படையிலேயே சிங்கப்பூரை நோக்கி பயணம் செய்வதாகவும் அத்தைய மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை சிங்கப்பூர் ஏற்றுக் கொள்வதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சைகளை பெற்ற பிறகு, அதற்கான ஆவணங்களை சபாநாயகருக்கு அனுப்புவதன் ஊடாக அவர் மருத்துவ விடுமுறையை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ விடுமுறைக்கான கோரிக்கையை மூன்று மாத காலத்திற்குள் கையளிக்க வேண்டும் என்பதுடன், அதன் பின்னர் அந்த விடுமுறையை நீடித்துக்கொள்வதற்கான நடைமுறையும் உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மருத்துவ சிகிச்சைகளுக்காக செல்லும் போது, பொறுப்பு ஜனாதிபதி, நாட்டின் ஜனாதிபதியாக செயல்படுவார் என்பதே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஷரத்தாகும்.

ஜனாதிபதி பதவி விலகியதாக கருத முடியுமா?

”ஜனாதிபதி பதவியை அவர் உதறி விட்டு நாட்டை விட்டுப் போனதாக இதுவரை கூறவில்லை. தான் நாட்டை விட்டுச் செல்வதாக சபாநாயகர் மற்றும் பிரதமரிடம் மட்டுமே அவர் கூறியுள்ளார். அவர் ஜனாதிபதி வெளியேறியுள்ளதால், பொறுப்பு ஜனாதிபதி பொறுப்பேற்கப்பட்டமை தொடர்பில் வர்த்தமானி ஒன்று வெளியாகியுள்ளது.

அப்படி என்றால், பதவியை விட்டு விலகி அவர் வெளிநாடு சென்றதாக கருத முடியாது. எனினும், ஜனாதிபதி பதவியை விட்டு, விட்டுச் சென்றதாக அரசியலமைப்பின் ஊடாக ஏற்றுக்கொள்ளகூடிய சில ஷரத்துக்கள் உள்ளன. ஆனால், அது ஜனாதிபதி எந்தவொரு விடயத்தையும் அறிவிக்காமல், காணாமல் போனதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது ஜனாதிபதி அரசியலமைப்புக்கு விதிகளுக்கு உட்பட்டு உரிய தரப்பிடம் தெரிவித்த பிறகே அவர் நாட்டை விட்டுச் சென்றுள்ளார்” என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய அரசியலமைப்பு நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான இளையதம்பி தம்பையா.

ஜனாதிபதி விலகினால், புதிய ஜனாதிபதி தெரிவு எப்படி நடக்கும்?

இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் தனது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக பதவி விலகுவாராயின், எஞ்சியுள்ள அவரது பதவிக் காலத்திற்கு மற்றுமொரு ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பிலான ஷரத்து, அரசியலமைப்பின் 40 (1) (அ)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

”ஜனாதிபதியின் பதவி அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக வருவதாக இருந்தால் நாடாளுமன்றம், ஜனாதிபதி என்ற பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகைமையுடையவராயுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஜனாதிபதி பதவிக்கு அங்ஙனம் வருகின்ற ஆள் எவரும், பதவியை வறிதாக்கிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் முடிவுறாதெஞ்சியுள்ள காலத்துக்கு மட்டுமே பதவி வகித்தல் வேண்டும்” என அரசியலமைப்பின் 40 (1(அ)இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13ஆம் தேதி அதிகாலையில் மாலத்தீவு செல்வதை, தமக்கு அறிவித்ததாக பிரதமர் தனது விசேட உரையில் உறுதிப்படுத்தியதுடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் ஊடக சந்திப்பொன்றை நடத்தி அதே தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், சபாநாயகர் மற்றும் பிரதமர் ஆகியோரிடம் அறிவித்த பிறகே அவர் பதவி விலகியதாகக் கருத முடியாது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில், யுத்த குற்றச்சாட்டுக்கள் கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ளமையினால், ஜனாதிபதி பதவியை இந்த சந்தர்ப்பத்தில் தக்க வைத்துக் கொள்வது முக்கியமானது எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தோல்வியுற்ற ஜனாதிபதியாக பதவி விலக போவதில்லை என கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், இன்று அல்லது நாளை ரணில் ஜனாதிபதியாக பதவியேற்கும் சாத்தியம் உள்ளதாக அலுவல்பூர்வமற்ற தகவல்கள் வெளிவருகின்றன.

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு மனைவியுடன் புறப்பட்ட இலங்கை ஜனாதிபதி!! (படங்கள்)

இலங்கையின் அரசியலமைப்பின் படி ஆயுதப் படையினருக்கு அதிகாரம்!!

களமிறங்குகிறதா ராணுவம்? இலங்கையில் உச்சக்கட்ட பதற்றம் – சரத் பொன்சேகா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! (படங்கள்)

கொழும்பில் பரபரப்பு: கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! (படங்கள்)

நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ஜித்தாவுக்கு பறக்கிறார்!!

துப்பாக்கிகளை பயன்படுத்தி வன்முறையாக செயற்படக் கூடும்! இராணுவப் பேச்சாளரின் பகிரங்க எச்சரிக்கை!!

மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு பயணமானார் கோட்டாபய!

சபையை நாளைக்கு கூட்டுவதில் சிக்கல் !!

முக்கிய இடங்களை கையளிக்க தீர்மானம் – போராட்டக்காரர்கள்!!

மீண்டும் ஊரடங்கு !!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசேட அறிவித்தல்!!

இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிட்டால் சட்டநடவடிக்கை – சபாநாயகர் !!

தரையிறங்கியது தனியார் ஜெட் விமானம் !!

மாலத்தீவில் வலுக்கும் எதிர்ப்பு: சிங்கப்பூருக்கு தப்பிச் செல்கிறார் கோத்தபய!!

கோட்டாபயவின் கையெழுத்தின்றி இணையங்களில் பகிரப்படும் பதவி விலகல் கடிதம்!!

வெளிநாட்டுக்கு தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய!!

ராணுவத்துக்கு அஞ்சாத மக்கள்!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நீக்கம் !!

துப்பாக்கி, தோட்டாக்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!!

கோட்டாபய ராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை – மஹிந்த யாப்பா!!

இலங்கை திருச்சபை விடுத்துள்ள அறிவிப்பு !!

சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்: ஜுலி சங் !!

அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவார் என நினைக்கவில்லை – ஜெயசூர்யா!!

‘‘ராஜினாமா கடிதம் அனுப்புகிறேன்’’- சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோத்தபய: விவரங்களை வெளியிட மாலத்தீவு மறுப்பு!!

பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து! மகாநாயக்க தேரர்கள்!!

ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும் – ரணில்!! (படங்கள்)

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றது ஏன்? (படங்கள்)

இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மக்கள் மீது நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டு வீச்சு!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நடைமுறை! வெளியானது வர்த்தமானி !!

களமிறங்குகிறதா ராணுவம்? இலங்கையில் உச்சக்கட்ட பதற்றம் – சரத் பொன்சேகா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! (படங்கள்)

பாராளுமன்றத்துக்கு முன்பாக போராட்டம்; ’ரணிலின் கேம்’ !!

சபாநாயகர் இல்லத்திற்கு முன் பதற்றநிலை!

அதிவிசேட வர்த்தமானி வெளியானது !!

புதிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் கோரிக்கை !!

சிங்கப்பூர் சென்றதும் இராஜினாமா?

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை !!

அதிரடியான தீர்மானத்தை எடுத்த கட்சித் தலைவர்கள்!!

கட்சித் தலைவர்களால் கோரிக்கை நிராகரிப்பு !!

சபாநாயகர் அதிரடி அறிவிப்பு !!

ரணிலின் உத்தரவுகளை ஏற்க வேண்டாம் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!!

பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி: கண்ணீர்ப்புகை தாக்குதல் !! (வீடியோ)

மாலைதீவு பொலிஸாரால் இலங்கை பிரஜை கைது!! (வீடியோ)

மாலத்தீவில் அகதியாக கோத்தபாய- வெளியேற்ற வலியுறுத்தி தலைநகர் மாலேவில் இலங்கை மக்கள் போராட்டம்!! (படங்கள், வீடியோ)

அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது!!

மக்களிடம் சவேந்திர சில்வா விடுத்துள்ள வேண்டுகோள்!!

சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கு விடுத்துள்ள அவசர அழைப்பு!!

பதில் ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு (காணொளி)

மற்றுமோர் அறிவிப்பை விடுத்தார் மஹிந்த !!

’ரணிலின் சட்டத்தை நாய் கூட மதிக்காது’ !!

பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்கள் வசம் (Video)

மாலைத்தீவிலிருந்தும் பறந்த கோட்டா!!

ஏமாற்றினார் மஹிந்த !!

’ரணிலின் பதவிப் பேராசைக்காக நாட்டை பலிகொடுக்க வேண்டாம்’ !!

பதில் ஜனாதிபதியான பிரதமர் நியமனம்!!

சடசடவென துப்பாக்கிச் சூடு !!

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை!!

கொழும்பு வானில் வட்டமிடும் ஹெலிகள் !! (வீடியோ)

மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு; நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் !!

அமெரிக்க தூதரகம் அவசர அறிவிப்பு !!

பதில் ஜனாதிபதி நியமிக்கவில்லை: மஹிந்த !!

பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம் !!

இந்தியா மறுத்தது !!

பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியது !!

கோட்டா வெளியேற்றம்; விமானப்படை விளக்கம் !!

விமானப்படை விமானத்தில் பறந்தார் கோட்டா !!

பேராசைப் பிடித்த ரணில் பதவி விலகுவார் என எதிர்பார்க்க முடியாது !!

கோட்டாவின் கோரிக்கை: நிராகரித்தது அமெரிக்கா !!

கோட்டா தப்பியோட முயன்றாரா?

எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாததை மக்கள் செய்துள்ளனர்!! (வீடியோ)

ரணிலை ஜனாதிபதியாக நியமிக்க தீர்மானம் !!

பிரதமர் பதவியை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது !!

பிரதமரின் ஊடகப் பிரிவிலுள்ள சில பொருள்கள் மாயம் !!

இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி !!

விமான நிலையத்தில் பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலை!! (வீடியோ)

கட்சி தலைவர்களுடன் போராட்டக்காரர்கள் சந்திப்பு !!

அலரிமாளிகை மோதல்; 10 பேர் வைத்தியசாலையில் !!!

ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி கனவு பலிக்குமா?

ஜனாதிபதி நாட்டில் உள்ளார் – முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார்!!

கோட்டா தொடர்பான கதையை மறுத்தார் மஹிந்த !!

ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஏகமனதாக தீர்மானம்!!

மத்திய வங்கியின் ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!!

ஹெல்மட்டை வீசிய அதிகாரி ஆயுதத்துடன் கைது !!

புதிய ஜனாதிபதி தெரிவுக்கு : 20 ​ஆம் திகதி வாக்கெடுப்பு !!

வெளிநாட்டில் இருக்கிறார் கோட்டா !!

முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் ரணில்!! (வீடியோ)

கட்சித் தலைவர்கள் அதிரடி தீர்மானம் !!

கோட்டாவின் செய்திகளை மஹிந்த வெளியிடுவார் !!

சுமந்திரன் பிரதமரானல் வரவேற்பேன் – க.வி.விக்னேஸ்வரன்!!

அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானம்!!!

ஜனாதிபதியாக சஜித்?

இன்று தீர்மானம் மிக்க கட்சித் தலைவர்கள் கூட்டம் !!

இலங்கையில் இந்திய படையினர்: இந்தியா மறுப்பு !!

பதவி விலகல்; பிரதமருக்கு ஜனாதிபதி விசேட அறிவிப்பு !!

ராஜபக்ஷவினர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் இந்திய இராணுவத்தை அனுப்பத் தயார் – சுப்பிரமணியன் சுவாமி!!

மைத்திரி முன்வைத்துள்ள 10 யோசனைகள் !!

ஜனாதிபதி மாளிகை பணம் குறித்து பொலிஸார் அறிக்கை!!

கோட்டாபாய விலகிய பின்னர்…? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !!

உறுதுணையாக இந்தியா தொடர்ந்து செயற்படும் !!

தீயின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்துவோம்!! (வீடியோ)

CID வசமாகும் விசாரணைகள் !! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகையிலிருந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது !! (வீடியோ)

எதிர்ப்பினால் தேரர் வெளியேறினார்!! (வீடியோ)

ஜனாதிபதி அதிரடி பணிப்பு !! (வீடியோ)

பிரதமரின் வீட்டுக்கு தீ; மூவர் கைது !! (வீடியோ)

சவேந்திர சில்வாவின் கோரிக்கை !! (வீடியோ)

ஆள விடுங்க சாமி! மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா.. கவிழும் இலங்கை அரசு!! (வீடியோ படங்கள்)

ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள், இரகசிய அறை !! (வீடியோ)

ராஜபக்ஷக்களை துரத்தும் 9 ஆம் இலக்கம் !! (வீடியோ)

தீ வைக்கப்பட்ட பிரதமரின் வீடு தொடர்பில் முக்கிய தகவல்கள் !! (வீடியோ)

மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா!! (வீடியோ)

புதனன்று விலகுகிறார் கோட்டா !! (வீடியோ)

சபாநாயகர் ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிவிப்பு!! (வீடியோ)

“ரணில்” வீடு முன் ரணகளம்.. பிரதமர் பதவி விலகியும் விடாத இலங்கை மக்கள் – தொடரும் போராட்டம்!! (வீடியோ படங்கள்)

வெகுண்டெழுந்த இலங்கை மக்கள்… பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டுக்கு தீ வைப்பு – பெரும் பதற்றம்!! (வீடியோ படங்கள்)

வன்முறை தீர்வாகாது: சுமந்திரன் கண்டனம் !! (வீடியோ)

ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு!! (வீடியோ)

பிரதமரின் வீட்டை நோக்கி மக்கள் படை !! (வீடியோ)

இனி என்னவாகும் இலங்கை.. அடுத்த அதிபர் “மகிந்தவா?” அனைத்துக் கட்சிகள் எடுத்த 4 முக்கிய முடிவுகள்!! (வீடியோ படங்கள்)

அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷே பதவி விலகனும்.. இலங்கை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!! (வீடியோ படங்கள்)

அதிபர் மாளிகை மட்டுமில்ல.. ஊடகங்களுக்கும் குறி! அட்டாக் மோடில் இலங்கை மக்கள்!! (வீடியோ, படங்கள்)

கோட்டாவுக்கு 24 மணி நேரம் காலக்கெடு !! (வீடியோ)

பிரதமர் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு அருகில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!!! (வீடியோ)

பந்துல குணவர்தன இராஜினாமா !! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகையில் இராப்போசனம்!! (வீடியோ)

பிரதமர் ரணில் பதவி விலக தயார்!! (வீடியோ)

அடுத்த ஜனாதிபதி யார் தெரியுமா? (வீடியோ)

நாடே கொந்தளிப்பு.. இலங்கை-ஆஸி டெஸ்ட் போட்டி.. மைதானத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் – பதற்றம்! (வீடியோ படங்கள்)

போராட்டத்துக்குப் போன இடத்தில் ‘நீராடல்’.. அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட இளைஞர்கள்!! (வீடியோ படங்கள்)

“போராட்டம் கையை மீறி செல்லும்..” எச்சரித்த உளவுத்துறை! நள்ளிரவில் எஸ்கேப் ஆன கோட்டாபய ராஜபக்ச!! (வீடியோ படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.