;
Athirady Tamil News

கோட்டாபய வாக்குறுதியளித்தபடி பதவி விலகாமல் தலைமறைவாகியுள்ளார் – சம்பிக்க!!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதியளித்தபடி பதவி விலகாமல் தலைமறைவாகியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறியதனை உறுதி செய்து அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 37 (2) க்கமைய, பிரதம நீதியரசரின் ஆலோசனை பெறுவதற்கான நடவடிக்கையை சபாநாயகர் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவி வெற்றிடமாக உள்ளதென உறுதி செய்யப்பட்டால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.