;
Athirady Tamil News

ஜனாதிபதியாக களம் இறங்கும் டலஸ்!!

0

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் வேட்புமனுக்கள் கோரப்படும் போது, தான் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் போட்டியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

டலஸ் அழகப்பெரும இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்றத்தில் அதனை நாளை அறிவிக்க உள்ளதாக பாராளுமன்ற ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு முன்னர் தீர்மானித்தபடி புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனு கோரல் எதிர்வரும் 19 ஆம் திகதியும் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு 20 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை ஆரம்பமானது.

இக்கூட்டத்தில் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிவதற்கு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.