;
Athirady Tamil News

இலங்கையில் ‘க்யூ ஆர்’ முறையில் இன்று முதல் எரிபொருள் விநியோகம்: சட்டவிரோத பதுக்கலை தடுக்குமா?

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து, மக்களுக்கு முறையாக எரிபொருளை விநியோகிக்கும் திட்டத்தை இன்று முதல் அமல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, QR நடைமுறையின் கீழ் இன்று முதல் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாகவும் இந்த நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.

https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தின் ஊடாக, தமக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

இதன்படி, இதுவரையில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

வாகனங்களை பயன்படுத்துவோர் எரிபொருளை சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைப்பதால், இலங்கையில் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

குறிப்பாக கறுப்பு சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் 2000 ரூபா முதல் 3500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இதன்படி, சட்டவிரோத பதுக்கலை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த க்யூவ் ஆர் நடைமுறையின் கீழ் வாரத்திற்கு குறிப்பிட்டளவு எரிபொருள் மாத்திரமே, ஒருவரினால் பெற்றுக்கொள்ள முடியும்.

பஸ்களுக்கு 40 லீட்டர் டீசலும், மூன்று சக்கரவண்டிகளுக்கு 5 லீட்டர் டீசலும், வேன் மற்றும் கார் ஆகியவற்றிற்கு 20 லீட்டர் டீசலும், அத்தியாவசிய தேவைக்கான வாகனங்களுக்கு 50 லீட்டர் டீசலும், லாரிகளுக்கு 50 லீட்டர் டீசலும் வாரமொன்றிற்கு பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீட்டர் பெட்ரோலும், மூன்று சக்கரவண்டிகளுக்கு 5 லீட்டர் பெட்ரோலும், வேன் மற்றும் கார் ஆகியவற்றிக்கு 20 லீட்டர் பெட்ரோலும் அத்தியாவசிய தேவைக்கான வாகனங்களுக்கு 50 லீட்டர் பெட்ரோலும், லாரிகளுக்கு 50 லீட்டர் பெட்ரோலும் வாரமொன்றிற்கு ஒருவரினால் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, மின்பிறப்பாக்கிகள் உள்ளிட்ட எரிபொருள் மூலம் இயங்கும் இயந்திரங்களுக்கு வாராந்தம் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருள் ரகம், வாரமொன்றிற்கு தேவையான எரிபொருளின் அளவு, எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றை தெரிவு செய்து, அபிரதேச செயலகங்களில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன், முச்சக்கரவண்டிகள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு கட்டாயம் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்துவோர் மற்றும் சட்டவிரோதமாக விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

’கோட்டாபய வந்தால் வரவேற்கப்படுவார்’ !!

2 ராஜபக்‌ஷர்களுக்கு பயணத்தடை நீடிப்பு !!

செய்திகளை முற்றாக மறுத்தார் சஜித் !!

ஐ.தே.கவுக்கு தாவ பல எம்.பிக்கள் முஸ்தீபு !!

அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவு கப்பல்- ஒருவழியாக ஒப்புக் கொண்டது இலங்கை.. ஆனால்?

இலங்கை பொருளாதாரம் : அடுத்த 6 மாதங்களில் வரிசைகட்டி நிற்கும் பிரச்னைகள்!! (படங்கள்)

’வந்து எனக்கு வீடு கட்டித் தாருங்கள்’

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தயார்: இந்திய ஜனாதிபதி !!

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

அமரகீர்த்தி கொலை வழக்கு; மேலும் 8 பேருக்கு வலைவீச்சு!! (வீடியோ)

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு!!

காலிமுகத்திடல் போராட்டத்தில் இருந்து விலகும் அமைப்பு!!

ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!!

போராட்டத்திலிருந்து விலகியது ‘ப்ளக் கெப்’ !!

சிறைச்சாலையை தயார்ப்படுத்துங்கள் !!

அவசரகால சட்டத்தால் சர்வதேச உதவிகளை இலக்கும் அபாயம் !!

தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம் !!

விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்!

நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!

’பட்டலந்த ரணில் நிரூபிக்க தவறிவிட்டார்’

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும்!!

பெத்தும் கேர்னர் கைது !!

இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன? (படங்கள்)

அவசர காலச்சட்டம் நிறைவேறியது !!

கொழும்பில் மற்றுமொரு போராட்டம்! புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!!

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே உள்ளனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!!

கோட்டாவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் !!

போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்! ஆனால் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டோம்: பிரதமர்!!

விசா காலம் நீடிப்பு! கோட்டாபயவின் அடுத்த திட்டம் அம்பலம்!!

இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)

கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)

விமானத்தில் வைத்து போராட்டக்காரர் கைது!! வீடியோ

காலி முகத்திடலில் பதற்றம் !!

கோட்டா விரைவில் திரும்புவார்: அரசாங்கம் !!

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – சஜித்!!!

சீனாவுக்கு செல்கிறார் ஜனாதிபதி ரணில் !!!

பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!

செப்டெம்பரில் இலங்கைக்கு புதியதொரு நெருக்கடி – பாக்கியசோதி!!

100 நாட்களுக்கு பின்.. மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்! இயல்புநிலை திரும்புமா? (படங்கள்)

இலங்கைக்கு நிதி கொடுக்காதீங்க.. ஜப்பானிடம் பற்ற வைத்த ரணில்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட சீக்ரெட்? (படங்கள்)

கோட்டாவுக்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.