;
Athirady Tamil News

அரசாங்கத்தில் இருந்த விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த சஜித்!!

0

இன்று (10) நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு முன்னதாக, அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் மற்றுமொரு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.