;
Athirady Tamil News

ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள், இரகசிய அறை !! (வீடியோ)

0

ஜனாதிபதி மாளிகை முழுமையாக போராட்டகாரர்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அங்கு பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பதுங்கு குழிக்குள் இரகசிய அறை ஒன்று இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள பிரத்தியேக கட்டிடம் ஒன்றில் இந்த பதுங்கு குழி இருக்கின்றது எனவும் இந்த பதுங்கு குழிக்குள் வெவ்வேறு அலுமாரி கதவுகள் ஊடாகவே உற்பிரவேசிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த பதுங்கு குழிக்குள் பிரமாண்ட பாரம் தூக்கி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பதுங்கு குழியில் அடிப்பகுதியில் மிகவும் இரகசிய அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் மிகவும் வலுவான இரும்பு கதவுகளால் திறக்க முடியாத அளவிற்கு இந்த இரகசிய அறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அந்த அறையின் கதவு இதுவரையில் திறக்க முடியவில்லை எனவும் ஏதேனும் முக்கிய அம்சங்கள் அல்லது விடயங்கள் அதில் இருக்கலாம் என போராட்டக்காரர்கள் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளனர்.

எனினும், அந்த இரகசிய அறை மிகவும் குளிரூட்டப்பட்ட அறையாக அமைக்கப்பட்டுள்ளது. அறையின் இரும்பு கதவின் அடிப்பகுதியில் இருக்கும் சிறிய இடைவெளி ஊடாக வரும் குளிர் காற்றின் ஊடாக அதனை உணர முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது















You might also like

Leave A Reply

Your email address will not be published.