மஹிந்த வெளிநாட்டுக்குப் பயணம்? (வீடியோ)

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகையில் இருந்து இன்று (10) அதிகாலை வேளையில், இராணுவத்தின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், அவர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் செல்லவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த பலரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர் என அறியமுடிகின்றது.