;
Athirady Tamil News

அவசரகால நிலைக்கு PUCSL எதிர்ப்பு!!

0

பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி 2278/22 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

ஐந்து வாரங்களில் இரண்டாவது முறையாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் பெற்றோலிய தொழிற்துறைக்கான ஒழுங்குறுத்தல் நிறுவனம் என்ற வகையில் 7.3 மில்லியன் மின்சார நுகர்வோர்கள் மற்றும் 21 மில்லியனுக்கும் அதிகமான சிறு குழந்தை முதல் வயதான நோயாளிகள் வரையான மின்சார நுகர்வோர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முதன்மை பொறுப்பும் பணியும் ஆகும்.

போதிய மின் விநியோகம் இல்லாத காரணத்தால் முன்னெடுக்கப்படும் தொடர் மின்வெட்டு தற்போதைய ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுமக்களிடையே அமைதியின்மையை அதிகரித்துள்ளது என எதிர்பார்க்கிறோம். நுகர்வோரின் நலன்களைப் பாதிக்கும் விடயங்கள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) பொறுப்பாகும். இச்சந்தர்ப்பத்தில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை மேலும் மோசமடைய செய்வதால் அத்தகைய அவசர நிலையின் போது நுகர்வோர் மற்றும் பங்குதாரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறுப்பை நிறைவேற்றுவதில் தடைகள் ஏற்படும் என்பதால் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதை தவிர்க்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

எமது இந்த ஆலோசனைகள் மற்றும் அது தொடர்பான விடயங்கள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.

ஆதரவா? இல்லையா? தீர்மானம் என்ன?

நாளை அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் !!

கோட்டா இங்குதான் பிழை விட்டார்: நாமல் !!

ஜனாதிபதியின் கோரிக்கையை சஜித் நிராகரித்தார் !!

சஜித் முன்வராவிடின் நாம் பொறுப்பேற்போம் !!

இதற்கு முன்னாலும் தொங்குகிறது உள்ளாடை !!

பாராளுமன்ற வீதி தடைகள் நீக்கம் !!

அவசரகாலச் சட்டம் ஏன்? அரசாங்கம் விளக்கம் !!

அரசாங்கத்தை சஜித்திடம் கொடுக்கிறார் கோட்டா?

சபையில் பல தடவைகள் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளேன்!!

“Go Home Ranil” புதிய போராட்டம் ஆரம்பம் !!

அவசரகால சட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை !!

அவசரகால சட்டம் தேவையா? கொதித்தெழுந்தார் ஜீவன் !!

’அவசர நிலை நெருக்கடிக்கு தீர்வாகாது’ !!

அவசர நிலை: கனேடிய உயர்ஸ்தானிகர் கருத்து !!

அவசரகாலச் சட்டம் அதிரடியாக அமுல் !!

இராஜினாமா செய்ய உறுதியளித்தார் மஹிந்த – அடுத்தவாரம் புதிய அமைச்சரவை!!

“சபாநாயகரை வீட்டுக்காவலில் வைப்போம்” !!

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!!

ஷிரந்தி பிரதமர் விருந்தினர்: சமூக வலைத்தளங்களில் கடும் சாடல் !!

பாராளுமன்ற வளாகத்தில் பதற்றம்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் !!

“மஹிந்த சரணம் கச்சாமி” பாடுபவர் சாணக்கியன்: ரணில் சாட்டையடி !!

உள்ளாடைகளை உலரவிட்டு எதிர்ப்பு !!

சில மணித்தியாலங்களில் உருவாக்கப்பட்ட “ஹொரு கோ கம” கிராமம்!! (வீடியோ)

சர்வதேச மன்னிப்புச்சபையின் குற்றச்சாட்டு !!

’பாராளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்கள் பக்கம்’ !!

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இதோ!!

இரகசிய வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்தார் சஜித் !!

காலை வாரினார் விமல் வீரவன்ச !!

’ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகினால் இணைந்து செயற்படுவோம்’ !!

‘சமுர்த்தி பயனாளர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தவறு’ !!

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியாது!!

போராட்டங்களுக்கு அமெரிக்க தூதுவர் ஆதரவு !!

புதியதோர் ஆரம்பம் வேண்டும் !!

“வரிகளை அதிகரிக்க வேண்டும்” !!

பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஷ!!

‘நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவில்லை’ !!

JVP தலைவருக்கு எதிராக பிரதமர் அலுவலகம் அதிரடி நடவடிக்கை !!

போராடுபவர்களை விரட்டி அடிக்க திட்டம் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.