அலரிமாளிகையில் பதற்றம்; கண்ணீர் புகை தாக்குதல்!! (வீடியோ, படங்கள்)

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்
அலரி மாளிகைக்குள் நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று அறியப்படுவோர் இன்று வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
கண்ணீர் புகை குண்டுகளை வீசும் காவல்துறையினர்
இந்த வன்முறையில் காயம்படைந்தவரை தூக்கிச் செல்லும் போலீச்சார்
போராட்டத் திடலில் குவிந்த பாதுகாப்பு படையினர்
போராட்டத் திடலில் கூடாரங்கள் தாக்கப்பட்டன.
போராட்டக் காரர்கள், அவர்களைத் தாக்கும் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என இரு தரப்பினர் மீதும் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசுகின்றனர்.