;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

மயக்க ஊசி செலுத்தி மனைவியை கொன்ற டாக்டர்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்

பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முனேகொலல் அய்யப்பா லே-அவுட் 4-வது கிராசில் வசித்து வருபவர் முனிரெட்டி. இவருக்கு நிகிதா மற்றும் கிருத்திகா ரெட்டி(வயது 29) என்ற மகள்கள் இருந்தனர். இவர்கள் 2 பேரும் டாக்டர்கள் ஆவார்கள்.…

போக்குவரத்து நெரிசலில் 12 மணி நேரம் சிக்கி தவித்த 500 மாணவர்கள்

மும்பை தாதர் மற்றும் மால்வாணியில் செயல்படும் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்த 5 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 500 மாணவ- மாணவிகள் 12 பஸ்களில் பால்கர் மாவட்டம் விரார் அருகே உள்ள கேளிக்கை விடுதிக்கு நேற்று முன்தினம் காலையில் சுற்றுலா…

கொழும்பு சென்ற யாழ் பெண் விபத்தில் உயிரிழப்பு ; திருமணமாகி ஒருவருடத்தில் நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் ஏழாலையை சேர்ந்த திருமணமான இளம் பெண் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்றபோது இன்று அதிகாலை 3:00 மணியவில் அனுராதபுரதிற்கு அண்மையில் அவர்கள் பயணித்த வாகனம்…

94 வருடங்களின் பின்னர் 9 ஏ சித்தி ; மாணவிக்கு வழங்கப்பட்ட பெரும் மதிப்புள்ள காசோலை

நற்பிட்டிமுனை கமு அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் 94 வருடங்களின் பின்னர் 9 ஏ சித்தி பெற்று சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு சமூக சேவகர் ஒருவர் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கி கெளரவித்தார்.…

யாழில் தீயில் கருகிய வர்த்தக நிலையம்

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் உட்பகுதி முழுவதும் தீயில் கருகி நாசமடைந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு (15) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

மெக்சிகோவை புரட்டிப்போட்ட கனமழை ; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை

வட அமெரிக்க நாடான மெக்சிகோவை பசிபிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளது. கடந்த 12-ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை அங்கு உருவானது. இது புயலாக வலுப்பெற்றது. மெக்சிகோவின் கடலோர மாகாணங்களான ஹிடால்கோ, புபேல்லா மற்றும் வெராக்ரூஸ் நகரை மையமாகக் கொண்டு…

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!

ரஷியா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் விளாதிமீர் புடினை, சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமத் அல் - ஷரா நேற்று (அக். 15) நேரில் சந்தித்துள்ளார். சிரியாவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த அசாத் குடும்பத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும்,…

வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்துவோர் கவனத்துக்கு! போபாலில் 60 லட்சம் மோசடி!

சைபர் குற்றவாளிகள் செய்யும் மோசடிகளில் பாஸ் மோசடியும் ஒன்று. இந்த மோசடிக்கு இப்பெயர் வரக்காரணம், ஒரு நிறுவனத்தின் மேலாளர் போல ஆள்மாறாட்டம் செய்து, ரகசிய தகவல்களைக் கோரி பண மோசடி செய்வது இந்த கும்பலின் வேலை. போபாலைச் சேர்ந்த ஒரு நிறுவன…

பாடசாலைகளை மூடி போராடுவோம்

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக கடந்த மூன்று நாட்களாக போராடி வரும் எங்களை சந்திக்காது பின் கதவால் வெளியேறிவர்களுக்கு வெட்கம் இல்லையா என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஆசிரியர் இடமாற்ற…

பாக்., – ஆப்கன் எல்லை மோதல்! 48 மணிநேர போர் நிறுத்தம் அமல்!

பாகிஸ்தான் ராணுவமும் ஆப்கன் தலிபான்களும் எல்லையில் புதன்கிழமை மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான எதிர்த்தரப்பு படையினரைக் கொன்றதாக இரு தரப்பினருமே கூறினர். இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஆறு பேரிடம் தடுப்புக்காவல் விசாரணைத் திட்டம்

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணை நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, "கணேமுல்ல…

இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலும் பதுங்கியிருந்தார்; விசாரணையில் தகவல்!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையில் தலைமறைவான காலட்டத்தில் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலும் பதுங்கியிருந்தார் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நேற்று இலங்கைக்கு அழைத்து…

உக்ரைன் போர் ; புட்டினை கடுமையாக சாடிய ட்ரம்ப்

உக்ரைன் உடனான போரை புட்டின் ஏன் தொடர்கிறார் என்று தெரியவில்லை. ஒரு வாரத்தில் முடிவடையக்கூடிய போர் 4 வருடமாக தொடர்கிறது'' என ரஷ்ய ஜனாதிபதி புட்டினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில்…

சங்குப்பிட்டி பெண் கொலையில் சிக்கிய இருவர் ; ஒருவர் பெண்

யாழ்ப்பாணம், சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகாமையில் பெண்ணொருவரின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 2 பிள்ளைகளின்…

இடமாற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் மேன் முறையீடு செய்யுங்கள் – ஆளுநர் பதில்

வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்ட, 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் எந்தவொரு ஆசிரியரும் மேன்முறையீடு…

வேலணை பிரதேச சபை அனுமதியின்றி நுண்நிதி கடன் நிறுவனங்கள் செயற்பட அனுமதி மறுப்பு

வேலணைப் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட பகுதிகளில், நுண்கடன் நிதி நிறுவனங்கள் பிரதேச சபையின் அனுமதியின்றி செயற்பட முடியாது என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம்,…

வடமாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம் – கூடி ஆராய்ந்த தமிழ் கட்சிகள்

மாகாண சபை தேர்தலை தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து எதிர்கொள்வது என்பது தொடர்பில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில் யாழ்ப்பாணத்தில் கட்சிகளுக்கு இடையிலான கூட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை…

சத்தீஷ்காரில் 50 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்

சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சல் பயங்கரவாதத்தை அழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் நக்சல்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கான அனைத்து உதவிகளும் அரசு சார்பில்…

கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சையிலிருந்த கென்ய முன்னாள் பிரதமர் காலமானார்!

கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சையிலிருந்த கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்கா காலமானார். அவருக்கு வயது 80. கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்திருந்த அவர், மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.…

வரதட்சனை கொடுக்க மறுத்த மனைவி… கணவர் செய்த கோர செயல்… கோவிலில் பரபரப்பு கடிதம்

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஆலகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி(வயது 28). இவருக்கு, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த விஜய்(30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு விஜய், அவரது…

மன்னார் நகர சபை கழிவு குவியலில் தீ பரவல் ; பெரும் அவதியில் மக்கள்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட கழிவு பொருட்களில் ஏற்பட்ட தீ பரவல் நேற்று (15) மூன்றாவது நாளாகவும் தொடர்வதால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு…

மனுஷ நாணயக்காரவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இஸ்ரேலில் வேலைக்கு ஊழியர்களை அனுப்புவதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தின் போது இஸ்ரேலில்…

யாழ்.மாநகர உறுப்பினர்களுக்கு பழுதடைந்த உணவுப் பொதிகள் 

யாழ்ப்பாணம் மாநகரசபையின் நேற்றைய அமர்வின்போது, உறுப்பினர்களுக்கு பழுதடைந்த உணவே வழங்கப்பட்டது என்று சபையில் சுட்டிக்காட்டப்பட்டது. மாலை 3 மணியளவில் உணவு இடைவேளைக்காக சபை ஒத்திவைக்கப்பட்டது. உணவு வேளையின் பின்னர் சபை ஆரம்பித்தபோது, மாநகர…

யாழில் இப்படியும் நூதன திருட்டு ; விசாரணையில் அம்பலமான தகவல்

சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா காசு என்பவற்றை திருடிய இளைஞர் ஒருவர் நேற்று (15) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், வாடகைக்கு வீடு சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு…

பாகிஸ்தான் எல்லையில் மோதல்! ஆப்கனின் 40 தலிபான்கள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற மோதலில், 40 தலிபான்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான எல்லையில் அமைந்துள்ள வெவ்வேறு இடங்களில், தலிபான்கள் தாக்குதல்…

பாகிஸ்தானை விற்ற கை பொம்மை! பாக். பிரதமர் ஷெபாஸுக்கு வலுக்கும் கண்டனம்!

எகிப்தில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் புகழ்ந்து பேசியது பாகிஸ்தான் நாட்டுக்கே அவமானகரமானதாக இருப்பதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அவரின் புகழ்ச்சியைக்…

அழகி மெலோனி! அருவருப்பாக மாறிய அமெரிக்க, துருக்கி அதிபர்களின் பாராட்டு!

எகிப்தில் நடைபெற்ற காஸா அமைதி மாநாட்டில், அழகி மெலோனி என்று இத்தாலி பிரதமர் குறித்த அமெரிக்க, துருக்கி அதிபர்களின் பாராட்டு அருவருப்பாக மாறியது. காஸா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்து, இஸ்ரேலிய பிணைக்…

பிரித்தானிய இளவரசர் நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் அதிகரிப்பு

எப்ஸ்டீன் விவாகரம் தொடர்பில் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் அதிகரித்துள்ளது. பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினரான யார்க் இளவரசர் ஆண்ட்ரூ, எப்ஸ்டீன் விவாகரத்தில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 2019-ஆம்…

சித்திரவதை, கொடூர பட்டினி… அடையாளம் காண முடியாமல் உருக்குலைந்த பாலஸ்தீன கைதிகள்

ஹமாஸ் படைகள் பணயக்கைதிகளை விடுவித்ததற்கு ஈடாக இஸ்ரேல் நிர்வாகம் கிட்டத்தட்ட 2,000 கைதிகளை விடுவித்த நிலையில், மொத்தமாக சிதைக்கபப்ட்டுள்ள காஸாவில் பாலஸ்தீனிய மக்களிடையே முதல் முறையாக மகிழ்ச்சி காணப்பட்டது. அடக்குமுறை, சித்திரவதை ஜனாதிபதி…

மாகாண சபை தேர்தலுக்கான வழி தேடல்

லக்ஸ்மன் பாலஸ்தீனத்தில் பரவும் ‘நமது காலத்தில் அமைதி’ என்ற வாசகம் இலங்கையிலும் எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால், சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு அரசு யுத்தத்தை நடத்தி முள்ளிவாய்க்காலில் அமைதியைப் புதைத்தது. ஆனால், இலங்கையின் அமைதி பெரும்பான்மை…

தொட்டிலில் தொங்கிய மாணவியின் சடலம்; அதிர்ச்சியில் உறவுகள்

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது பாடசாலை மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (14) அன்று மாலை 5.45மணியளவில்…

காப்பீட்டு தொகைக்காக புது மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவர் கைது

காப்பீட்டு தொகைக்காக தனது புது மனைவியைக் கொன்று சாலை விபத்தில் உயிரிழந்ததுபோல நாடகமாடிய கணவரை ஜார்க்கண்ட் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநிலம் ஹஜாரிபாக் பதாமா புறநகர் காவல்நிலைய அதிகாரி சஞ்சித்குமார் துபே கூறியதாவது:…

யாழில் கேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு; வாய்பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்தகதி!

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவர் வழங்கிய…

ஆயத்த ஆடை ஆலையில் தீ: வங்கதேசத்தில் 16 பேர் உயிரிழப்பு

வங்கதேச தலைநகர் டாக்காவில் ஆயத்த ஆடை ஆலை மற்றும் ரசாயன கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இது குறித்து தீயணைப்புப் படை அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஆயத்த ஆடை ஆலைக்கு அருகில் உள்ள ரசாயன கிடங்கில்…