;
Athirady Tamil News
Yearly Archives

2026

பாகிஸ்தானில் மசூதி தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா மசூதியில் தற்கொலைப்படை பயங்கரவாதி நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினார். அதில் 30-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். நூற்றுக் கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில், இத்தாக்குதல்…

எப்ஸ்டீன் கோப்பில் 169 முறை பெயர் ; ஒருநாளும் நான் சந்தித்ததில்லை; மறுக்கும் தலாய்லாமா

அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்களை வெளியிட்டது. இதில் உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,…

ஒபாமா, அவரது மனைவி தொடர்பில் வெளியான காணொளி ; மன்னிப்பு கேட்க மாட்டேன்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் 2020-ம் ஆண்டு தேர்தலில் தனது வெற்றியை திருடுவதற்கு நிறுவனம் ஒன்று உதவியது என்று தெரிவித்தார். மேலும் அந்த வீடியோவில் முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி…

நடந்து சென்ற 13 வயது சிறுவனின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் சாரதி

உடவளவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, உடவளவை - தனமல்வில வீதியின் மலபொட்டுஆர பகுதியில், நேற்று (08) மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேரியல் சந்தியிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, வீதியோரத்தில்…

திருகோணமலை புத்தர் சிலை; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!

திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பெளத்த பிக்குகள் உற்பட 10 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு திருகோணமலை மேல்…

கச்சத்தீவு திருவிழா 27ஆமாம் திகதி – முன்னாயத்த நடவடிக்கைகளில் கடற்படையினர் தீவிரம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் கடற்படையினர் முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை இலங்கையைச் சேர்ந்த…

தபால் பெட்டிக்கருகில் மீட்கப்பட்ட சடலத்தால் பரப்ரப்பு

களுத்துறை, வஸ்கடுவ பகுதியிலுள்ள தபால் பெட்டிக்கருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் யார் என இன்னும் யாரென்று அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகின்றது.…

ஜப்பான் தோ்தல்: பிரதமா் சனே தகாய்ச்சி கட்சி வரலாற்று வெற்றி!

ஜப்பான் நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் சனே தகாய்ச்சி தலைமையிலான ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி (எல்டிபி) தனிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையான…

யாழில் இருந்து தப்பி சென்ற வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் 09 வருடங்களின் பின் இந்தியாவில்…

யாழ்ப்பாணத்தில் இயங்கிய வன்முறை கும்பலை சேர்ந்த இருவர் 09 வருடங்களின் பின்னர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் , கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை மற்றும்…

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

யாழ் . நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.  யாழ் . போதனா வைத்தியசாலையின் பின் புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியினை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…

கியூபாவில் கடுமையான நிலநடுக்கம் ; ரிக்டரில் 5.5 ஆக பதிவு

கியூபாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் முதலில் 5.9 ஆக பதிவான இந்நிலநடுக்கம் பின்னர் 5.5 ஆக உறுதி செய்யப்பட்டது. இது 15 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலத்தின் மேல் பகுதியை ஒட்டி ஏற்பட கூடிய நிலநடுக்கம்,…

யாழில்.மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

யாழ்ப்பாணத்தில் தனது குடும்பத்தினரின் பங்களிப்புடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரை தாம் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் , மாணவர்கள் , இளைஞர்கள்…

ஜப்பான் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு அமோக வெற்றி! – கருத்துக்கணிப்பு முடிவுகள்

டோக்கியோ : ஜப்பான் நாடாளுமன்ற கீழவைக்கான தேர்தலில் ஆளுங்கட்சி அமோக முன்னிலை பெற்று பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள்…

இலங்கை தேயிலை மீண்டும் ஆதிக்கம் ; ஈரானுடன் மீண்டும் இணைந்த இலங்கை வர்த்தகம்

ஈரானில் நிலவிய அமைதியற்ற சூழல் மற்றும் தகவல் தொடர்புத்தடைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையிலிருந்து ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் முன்னேற்றமடைந்து வருவதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாத ஆரம்பத்தில் நிலவிய…

பிரித்தானியாவில் AIயால் பரவும் புதிய மோசடி ; புலம்பெயர் தமிழர்களுக்கான எச்சரிக்கை

பிரித்தானியாவில் தொலைபேசி மோசடிக்காரர்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரது குரலை அப்படியே நகலெடுத்து அவர்களது உறவினர்களை ஏமாற்றும் புதிய மோசடி யுக்தியை கையாண்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில்…

ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா கைது

ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

சுவிஸ் தமிழர்களின் நகைக்கடைகளில் திடீர் சோதனை ; 10 விதி மீறல் கண்டுபிடிப்பு

சுவிஸ்லாந்து சூரிச் நகரில் 14 தங்க வியாபார நிலையங்களில் பொலிஸாரின் திடீர் சோதனையில் 10 வியாபாரிகள் விதிகளை பின்பற்றவில்லை எனக் கண்டறியப்பட்டதுடன் இதில் ஒரு நகைக்கடை தமிழர்கள் சொந்தமானது என பொலிஸார் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.…

வாஷிங்டன் போஸ்ட் ஊழியர்கள் பணிநீக்கம்: தலைமைச் செயல் அதிகாரியும் ராஜிநாமா!

அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட்டில் பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டதன் எதிரொலியாக தலைமைச் செயல் அதிகாரி வில் லூயிஸும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன்

90 கிட்ஸ்களை விட அறிவாற்றலில் பின் தங்கும் ஜென்சிக்கள்: ஆய்வில் வெளியான தகவல்

80, 90களில் பிறந்த மில்லினியல்கள் விட ஜென்சி (Gen-Z) தலைமுறையினர் குறைவான ஐகியூ அளவையே பெற்றுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற நரம்பியல் விஞ்ஞானி ஜாரெட் ஹோர்வத் நடத்திய ஆய்வில், முந்தைய தலைமுறையை விட புதிய தலைமுறையின் ஐகியூ…

தாக்கினால் பதிலடி கொடுப்போம் ; அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளால் ஈரான் தாக்கப்பட்டால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi)…

தமிழர் பகுதியில் பலசரக்குக் கடைக்குள் புகுந்து பெரும் அடாவடி செய்த காட்டுயானை

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நீணாக்கேணி கிராமத்திற்குள் இன்று (08) அதிகாலை காட்டு யானையொன்று உட்புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்டு வந்த பலசரக்குக் கடையை காட்டு யானை உடைத்து…

மீந்துபோன உணவைக் கழுவி மீண்டும் விற்பனை ; அதிர்ச்சி காணொளி வைரல்

மலேசியாவின் சிரம்பான் (Seremban) பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், எஞ்சிய உணவுகளைக் கழுவி மீண்டும் விற்பனைக்குத் தயார் செய்த அதிர்ச்சி காணொளி வெளியானதையடுத்து, அந்த உணவகத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி…

கிழக்கு மாகாணத்தின் முக்கிய சுற்றுலாத்தளத்தை ஆட்டிப்படைக்கும் நூற்றுக்கணக்கான கட்டாக்காலி…

கிழக்கு மாகாணத்தின் பிரபல்யமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான காத்தான்குடி கடற்கரையில், நூற்றுக்கணக்கான கட்டாக்காலி நாய்களின் தொல்லையினால் அங்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், காலை மற்றும் மாலை வேளைகளில்…

ரஷியா – உக்ரைன் போா்: ஜூன் மாதத்துக்குள் தீா்வு – அமெரிக்கா கெடு!

சுமாா் 4 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷியா-உக்ரைன் போரில் வரும் ஜூன் மாதத்துக்குள் தீா்வுக் காண அமெரிக்கா கெடு விதித்துள்ளதாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘வரும் கோடை காலத்தின் தொடக்கத்துக்குள்…

யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய நூதன சப்ததள பஞ்சகுண்டசகித இராஜகோபுர மகா…

யாழ்ப்பாணம் - மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய நூதன சப்ததள பஞ்சகுண்டசகித இராஜகோபுர மகா கும்பாபிஷேகம் இன்று(08) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு டேஷ் பொறுப்பேற்பு!

பாகிஸ்தானில் 36 பேர் பலியான தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு டேஷின் கிளை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, வெடிகுண்டு மூலம் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.…

மூவரை பலியெடுத்த கோர விபத்து ; தீவிரமாகும் விசாரணை

அவிசாவளை - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த காரில் 4 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை…

நேபாளம்: மர்ம பொருள் வெடித்து 4 சிறுவர்கள் காயம்

நேபாளத்தில் மர்ம பொருள் வெடித்து 4 சிறுவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தின் சப்தரி மாவட்டத்தில் உள்ள துதைலா நதி அருகே சனிக்கிழமை 4 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம பொருள் வெடித்ததில் அவர்கள் 4…

சீனாவில் வசந்த காலத்தை ஏர் பூட்டி வரவேற்ற மக்கள்

பெய்ஜிங், சீனாவில் குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குகிறது. இதனை, அந்நாட்டு மக்கள் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விவசாயத்தை போற்றும் வித மாக நடைபெறும் இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஏர் பூட்டி…

ரஷியா: பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 4 இந்திய மாணவர்கள் காயம்

மாஸ்கோ, ரஷியாவின் பர்கோஷ்தான் குடியரசில் உள்ள உபா பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் சிறுவன் ஒருவன்…

ஆசிரியர் சேவைக்கான போட்டிப்பரீட்சை வர்த்தமானியில் அநீதி ; சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வர்த்தமானி ஒன்றைக் கூட அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். ஆசிரியர் சேவைக்கான போட்டிப்பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள…

காலி வர்த்தக நிலையம் ஒன்றில் தீவிபத்து

காலி, தெவட்ட சந்திப் பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்பு சேகரிக்கும் கடையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ விபத்து காரணமாக காலி - மாத்தறை பிரதான வீதியில் கடும்…

இலங்கையில் பல ஆயிரம் கோடி பணத்தை வைப்பு செய்த மர்ம நபர் ; வரலாற்றில் முதல் முறை

இலங்கையில் பல ஆயிரம் கோடி கணக்கான ரூபாய் பணத்தை பல வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்திருந்த மர்ம நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபரின் ஒரு வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 கோடிக்கு மேற்பட்ட தொகை…

டீன் ஏஜ் பெண்ணின் கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் வசிக்கும் 17 வயது சிறுமி, பக்கத்து வீட்டு நண்பருடன் பழகி கர்ப்பமானார். அவர் தற்போது 30 வார கருவை வயிற்றில் சுமக்கிறார். தற்போது அவருக்கு 18 வயது 4 மாதங்கள் ஆகிறது. சட்டவிரோதமாக பிறக்கும் இந்த குழந்தையை…