;
Athirady Tamil News

‘பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்’

0

பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.

சமூக ஊடகங்கள் ஊடாக சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செல்வாக்கு அல்லது அழுத்தங்களை பிரயோகித்து அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைக்கு இடையூறு விளைவிக்க முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி பொது பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரையின் கீழ், சமூக ஊடகங்களில் இதுபோன்ற அறிவுறுத்தல்களை உருவாக்கி வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.