;
Athirady Tamil News

பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து! மகாநாயக்க தேரர்கள்!!

0

ஜனநாயக கட்டமைப்பிற்குள் இணக்கமான அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் அமைதியின்மைக்கு தீர்வினை குறிப்பிட்டு விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் தற்போது பல இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறு முன்னெடுக்கப்படும் போராட்டகளத்தில் சொத்துக்களை சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நேரத்தில் நாட்டின் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,நாட்டில் தற்போது நிலவும் அமைதியின்மைக்கு தீர்வினை பெற உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி மக்களுக்கு ஏற்ற முடிவினை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.