;
Athirady Tamil News

புதிய ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!! (வீடியோ)

0

எதிர்க்கட்சி உட்பட பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரிந்து நின்ற காலம் போதும் எனவும், அனைவரும் ஒன்றிணைந்து புதிய நடைமுறை ஒன்றை உருவாக்க அனைவரும் ஒன்றிணையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது பதவிப்பிரமாணத்தை பாராளுமன்ற சபைக்கு வௌியில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடத்துமாறு சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


You might also like

Leave A Reply

Your email address will not be published.