;
Athirady Tamil News

இன்று தீர்மானம் மிக்க கட்சித் தலைவர்கள் கூட்டம் !!

0

நாட்டின் எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (11) தீர்மானம் மிக்க கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதன் பின்னர், புதிய ஜனாதிபதியை நியமிப்பது மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இன்றைய கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.