இதற்கு முன்னாலும் தொங்குகிறது உள்ளாடை !!

பாராளுமன்றத்துக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலிகளில் உள்ளாடைகளை உலரவிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், புற்றுநோய் வைத்தியசாலைகளிலுள்ள பெண்கள் மருந்து தட்டுப்பாட்டினால் அவதிவுறுவதை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் உள்ளாடை தொங்கவிடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மகாநாயக்க தேரர்களின் அறிவித்தல்
புத்திஜீவிகளை உள்ளடக்கிய சர்வகட்சி பொது இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முயற்சி எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்கள் மீண்டும் அறிவித்துள்ளனர்.